பண்பாட்டின் உள்ளடுக்கில் பாயும் சமூகப்பார்வை | கதை அறியும் கலை

பண்பாட்டின் உள்ளடுக்கில் பாயும் சமூகப்பார்வை | கதை அறியும் கலை
Updated on
2 min read

கோவேத. சுவாமி​நாதன் கதைகளைத் தமிழ்ச் சமூகத்​தின் கரிய ஆன்மா எனலாம். பரந்​துபட்ட வாழ்​வியல் கோலத்​தோடு மனிதர்​களிடையே புதைந்​திருக்​கும் சாதிய கீழ்​மை​கள் சக மனிதர்​களை வெறுப்​புடன் ஒதுக்​கு​வதை மிகை​யில்​லாமல் உயிர்ப்​புடன் காட்​டும் கதைஞர் சுவாமிநாதன்.

கோம்பை மலை அடி​வாரத்​தில் கடலைப் பம்பல் வரு​கிறது. சற்​றுத் தொலை​வான கிராமங்​களில் இருந்து கடலை எடுக்க குடும்​பம் குடும்​ப​மாக வரு​கிறார்​கள். பத்து நாள் இருப்​புவேலை. பம்பல் தொடங்​கி​விட்​டதை அறிந்த சற்​குணம் கடலைப் பம்பலுக்​குச் செல்​ல​வேண்​டுமெனக் குதிக்​கிறான். மனைவி மரிய​முத்​து​வோ, வயிற்​றுப் போக்​கில் அவதிப்​படும் மகளை​யும் கைக்​குழந்​தையை​யும் வைத்​துக்​கொண்டு இருப்பு வேலைக்​குப் போக​முடி​யாது என்​கிறாள். சற்​குணம் சவடால் பேர்​வழி.

தொடர்ந்து ஓரிடத்​துக்கு வேலைக்​குச் செல்​பவர்​களை கூலி சரி​யில்​லை, தோட்​டக்​காரன் சரி​யில்லை என்று வேலை​யைக் கெடுத்​து​விடக் கூடிய​வன். வேறு வழி​யில்​லாமல் பொட்டி சட்​டிகளை சுமந்​து​கொண்டு கணவனுடன் கோம்பை வரு​கிறாள். வந்த இடத்​தில் ஏற்​படும் அனுபவம்​தான் ‘கடலைப் பம்பல்’ கதை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in