விலகல் பார்வை | கதை அறியும் கலை

விலகல் பார்வை | கதை அறியும் கலை
Updated on
2 min read

அடக்​க​மான தொனி​யில் அதே நேரம் ஒரு விச​யத்​தின் முழு​மையை தன் கதைகளின் வழி காட்​டி​விடக் கூடிய எழுத்​துத் திறன் பெற்​றவர் அசோகமித்​திரன். உணர்ச்​சிகர​மான சூழலிலும் ஒரு பிரச்​சனையை எல்லா கோணங்​களில் விலகி நின்​றுப் பார்த்து எழுதும் எழுத்து முறையை இயல்​பாக பெற்​றிருக்​கிறார். அவர் எழு​திய மிகச்​சிறந்த கதைகளுள் ஒன்று ‘காத்​திருத்​தல்.’

‘காத்​திருத்​தல்’ கதை​மாந்​தன் தன் கட்சி சமூகத்​துக்கு நல்ல பங்​களிப்பு செய்​யும் அடிப்​படை கொள்​கை​யுடன் இயங்​கு​வ​தாக நம்பி உழைக்​கிறான். தேர்​தலில் நின்ற தன் கட்​சிக்​காரருக்கு நம்​பிக்​கை​யுடன் தேர்​தல் பணி ஆற்​றுகிறான். ஆனால் தேர்​தலில் இவன் கட்சி தோற்​று​விடு​கிறது. தோற்​று​விட்ட மறு​நாள் இரவு இவன் வீட்டை கூலிப்​படை​யினர் கல்​லெறிந்து தாக்​கு​கின்​றனர். இதனை மனைவி மற்​றும் மைத்​துனனுடன் எதிர்​கொள்​கிறான்.

அவர்​களை விரட்டி அடிக்​கிறான். மறு​நாள் இரவு மறு​படி எப்​படி​யும் பெரும் பட்​டாளத்​துடன் வந்து தாக்​கக்​கூடும் என்று மனை​வி, குழந்​தைகளைத் தாய்​வீட்​டுக்கு அனுப்​பு​கிறான். தாக்​குதலை எதிர்​நோக்கி அவன் நேற்று நடந்​தவற்​றுட​னும் இன்று நடப்​பனவற்​றுட​னும் நினைத்து வீட்​டில் காத்​திருக்​கிறான். இது ‘காத்​திருத்​தல்’ கதை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in