கலைவசமாகும் விமர்சனம் | கதை அறியும் கலை
சமூகச் சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டும் எழுத்து வடிவமாக கதை எழுதுவதைப் பயன்படுத்திக் கொண்டவர் அறிஞர் அண்ணா. இந்த நேரடி விமர்சனங்களைக் கலை குணத்தோடு ஏற்று வெளிப்பட்ட ஒரு நல்ல கதை ‘சொர்க்கத்தில் நரகம்’.
தேவலோகப் பதவியை அடையும் பொருட்டு கடும் தவத்தில் இருக்கிறார் விசுவாமித்திரர். அவரது தவத்தைக் கலைத்து,அவரது தலைமைத்துவ ஆசையை நிர்மூலமாக்க வேண்டும் என்ற நோக்கில் மேனகையை அனுப்புகின்றனர். தனக்கு இடப்பட்ட கட்டளையை ஏற்று, காட்டில் தவமிருக்கும் விசுவாமித்திரர் முன் வருகிறாள் மேனகை. வனப்பு மிக்க மேனகையின் கவர்ச்சியான நாட்டியத்தில் தன்னை இழக்கிறார் விசுவாமித்திரர். அதனால் மேனகைக்கு ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறாள். விசுவாமித்திரரை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் வந்த வேலை முடிந்தது. சொர்க்கத்துக்கு மன வருத்தத்துடன் திரும்புகிறாள் மேனகை. இதுதான் கதை.
