மனவெளி சஞ்சாரம் | கதை அறியும் கலை

மனவெளி சஞ்சாரம் | கதை அறியும் கலை
Updated on
2 min read

மௌனி தனது கதைகளில், அக உலகைப்​போலவே இந்த யதார்த்த உலகை​யும் ஒரு கனவு படிமத்​தோற்​ற​மாகக் கண்டு எழுதுகிறார். அதற்கு மாயா​வாதம் என்ற தத்​து​வதளத்​தில் வைத்து அவர் வாழ்க்​கை​யைப் பார்க்​கிறார். அதற்​கான ஒரு எழுத்​து​ முறையை மௌனி கையாள்​கிறார். மனவெளி​யில் தோன்​றும் விசித்​திர​மான காட்​சிப்​படிமங்​களைக் கொண்டு அவர் புனை​யும் உலகம் தனித்​து​வ​மானது. அத்​தகைய தனித்​து​வத்​துக்குச் சான்​றாக விளங்​கும் கதைகளுள் ‘அத்​து​வானவெளி’ மிக முக்​கிய​மானது.

அத்​து​வானவெளி​யின் மர்​மத் தொடக்​கம்: ஒரு மாலைப் பொழு​தில் இருள் மெல்​லப் பரவத் தொடங்​கு​கிறது. கதை​யின் நாயகன் வாசலுக்கு வந்து காலார நடக்​கத் தொடங்​கு​கிறான். அப்​போது அவன் வீட்டு முன்​னால் இருக்​கும் மரம் வழக்​கத்​திற்கு மாறாகத் தெரி​கிறது. அவன் நடக்​கத் தொடங்​கிய கணமே, பின்​னாலிருந்து ஒரு குரல் கேட்​கிறது. “உங்​களைத் தேடித்​தான் வந்​தேன்” என்று சொல்​லும் அந்த மர்ம நபரிட​மிருந்து தப்​பிக்க அவன் முயல்​கிறான்.

கோவிலுக்​குச் செல்​வ​தாக​வும் நண்​பர் வீட்​டுக்​குச் செல்​வ​தாக​வும் சாக்​குப்​போக்​குச் சொன்​னாலும், வந்​தவன் விடா​மல் பின் தொடர்​கிறான். இந்த மர்​மப் பயணம் இறு​தி​யில் ஒரு சுடு​காட்​டில் வந்து நிற்​கிறது. அங்கே காணும் விசித்​திரக் காட்​சி​யுடன் கதை முடிகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in