

கணத்துக்குக் கணம் மாறும் மனித எண்ணங்களின் ஆழமான குகைக்குள் லாவகமாக நுழைந்து, பாத்திரங்களின் மனச்சலனங்களை எவ்வித ஒளிவுமறைவுமின்றி அப்பட்டமாகச் சித்தரிப்பவர் எழுத்தாளர் ஆதவன். தன்னைத் தற்காத்துக்கொள்ள முயலும் மனிதர்களின் நுட்பமான பாவனைகளை ஆதவன் காட்டிய அளவுக்குத் தமிழில் வேறெந்தப் படைப்பாளியும் இத்தனை நெருக்கமாகக் காட்டியதில்லை.
குறிப்பாக, அவரது ‘கார்த்திக்’ கதையில் வெளிப்படும் கவித்துவத் தருணங்கள், மற்ற சிறந்த கதைகளை விடவும் மேலோங்கி நிற்கின்றன. அகத்தின் அழகையும் புறத்தின் அழகையும் ஒருசேரக் கோத்து, ஒரு முழுமையான கலைப்படைப்பை இந்தக் கதையில் அவர் உருவாக்கியிருக்கிறார்.