மீண்டும் உயிர்த்தெழுந்த ஜெயகாந்தன்

மீண்டும் உயிர்த்தெழுந்த ஜெயகாந்தன்
Updated on
2 min read

இந்த ஆண்டு கவிஞர் வைர​முத்​து​வுக்கு ஞானபீட விருது அறிவிக்​கப்​பட்​டிருக்​கிறது. விருது அறி​வித்த நாளி​லிருந்தே சர்ச்​சைகளும் வலுக்​கத் தொடங்​கி​விட்​டன. இந்த ஞானபீட விருது அறி​விப்பு மேலும் சிலரை​யும் இழுத்​துப் பொது​வெளி​யில் விட்​டுள்​ளது. அதில் முக்​கிய​மானவர்​கள் அகிலன், ஜெய​காந்​தன் மற்​றும் சுந்தர ராம​சாமி.

முதல் இரு​வரும் தமிழில் ஏற்​கெனவே ஞானபீட விருது பெற்​றவர்​கள். அகிலனுக்கு 1975ஆம் ஆண்டு ஞானபீட விருது அறி​வித்​த​போது அவரது எழுத்​துச் செயல்​பாடு​களுக்கு எதி​ராக, ‘போலி முகங்​கள் - சந்​தர்ப்​பம்: ஞானபீடப் பரிசு’ (பிரக்​ஞை, 1976) என்​றொரு கட்​டுரையைச் சுந்தர ராம​சாமி எழு​தி​னார். அந்​தக் கட்​டுரை மீண்​டும் விவாதத்​துக்கு எடுத்​துக் கொள்​ளப்​பட்​டுள்​ளது. இது தவிர, ‘அகிலனின் சித்​திரப்​பாவை’ (1978) என்​றொரு கட்​டுரையை​யும் சு.​ரா. எழு​தி​யிருக்​கிறார். ‘பொதுப்​புத்​தி​யைக்​கூடப் பிடுங்கி எறிந்​து​விட்டு ஆசிரியர் உருட்டி வைத்​திருக்​கும் ஒரு கோமாளிக் கதை இது’ என்று அந்​நாவலை விமர்​சனம் செய்​திருக்​கிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in