கற்றலிற் கேட்டலே நன்றா?

கற்றலிற் கேட்டலே நன்றா?
Updated on
2 min read

சு​மார் 25 ஆண்​டு​களுக்கு முன்​பு, நாங்​கள் முதன்​முதலாக ஒலிப்​ புத்​தகத்தை (Audio book) அறி​முகப்​படுத்​தி​ய​போது, அது ஒரு பெரும் வியப்​பாகப் பார்க்​கப்​பட்​டது. ‘கற்​றலிற் கேட்​டலே நன்​று’ என்ற வகை​யில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த போதி​லும், அன்​றைய சூழலில் தயாரிப்​புச் செலவு அதி​க​மாக இருந்​த​தால் அத்​திட்​டத்​தைத் தொடர இயல​வில்​லை. ஆனால், எதிர்​காலத்​தில் ஒலிப்​ புத்​தகங்​கள் பெரும் தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்று அன்று கணித்​தோம்.

தொழில்​நுட்​பப் போட்​டி​யும் மாற்​ற​மும்: காலப்​போக்​கில் அறி​வியல் வளர்ச்சி நாம் எதிர்​பா​ராத திசை​யில் ‘மின் புத்​தகங்​களை’ (E-books) முன்​னிறுத்​தி​யது. அச்​சுப்​ புத்​தக​மா, மின் புத்​தகமா என்ற போட்​டி​யில் ஒலிப் ​புத்​தகங்​கள் சற்றே பின்​வாங்​கி​னாலும், வாசிப்பு உலகில் தனக்​கென ஒரு தனித்​து​வ​மான இடத்தை அவை இன்​றும் தக்​க​வைத்​துள்​ளன. இன்று செயற்கை நுண்​ணறி​வின் (AI) துணை​யோடு, ஒரு புத்​தகத்தை வாசிக்​காமலேயே அதில் உள்ள கருத்​துக்​களை நொடி​யில் கிரகித்​துக்​கொள்​ளும் வாய்ப்பு உரு​வாகி​யுள்​ளது.

இதனால் பலரும் குறிப்​பாக, மாணவர்​கள் பெரும் பயன்​பெற்று வரு​வதைக் காண்​கிறோம். இருப்​பினும், ஒரு திரைப்​படத்​தைப் பற்றி மற்​றவர் சொல்​லக் கேட்​ப​தற்​கும், நாமே திரை​யில் காண்​ப​தற்​கும் உள்ள வித்​தி​யாசத்​தைப் போலத்​தான் இது​வும். செயற்கை நுண்​ணறி​வின் புரிதலை விட நம்​முடைய நேரடி வாசிப்பு அனுபவம் ஆழமானது; அந்​தச் சுய வாசிப்​பில் கிடைக்​கும் இன்​பம் அளப்​பரியது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in