இலக்கியத்தை எப்படி வாசிக்க வேண்டும்?

ஏப்ரல் 23 - இளம் தலைமுறையினரிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் - உலகப் புத்தக நாள்
இலக்கியத்தை எப்படி வாசிக்க வேண்டும்?
Updated on
2 min read

மரபான இலக்​கிய வாசிப்பு அனுபவ​மும், நவீன இலக்​கிய வாசிப்பு அனுபவ​மும் முற்​றி​லும் வேறானவை. நம் வாழ்​வின் எதார்த்​தத்​தில் அனைத்​தும் ஒரு நேர்க்​கோட்​டில் தெளி​வாக அமைந்​து​விடு​வ​தில்​லை; அது​போல​வே, நவீன இலக்​கி​யத்​தி​லும் செய்​தி​கள் வாசக​னுக்கு நேரடி​யாகச் சொல்​லப்​படு​வ​தில்​லை. எனவே, ஒரு புதிய வாசகர் முதல்​முறை வாசிக்​கும்​போது அது சற்றே கடின​மாகத் தோன்​று​வது மிக​வும் இயல்​பானது​தான். ஆனால், சரி​யான முறை​யில் அணுகி​னால், நவீன இலக்​கி​யம் நம்மை ஆழமாகச் சிந்​திக்க வைப்​ப​தோடு, ஒரு புதிய வாழ்​வியல் அனுபவத்​தை​யும் நமக்​குப் பரி​சாக வழங்​கும்.

வாசக​னின் பங்​கேற்பு: நவீன இலக்​கிய வாசிப்​பில் வாசக​னின் பங்​கேற்பு என்​பது மிக முக்​கிய​மானது. இங்கு எழுத்​தாளர் எல்​லா​வற்​றை​யும் நேரடி​யாகச் சொல்​லி​விடு​வ​தில்​லை; மாறாக, கதை​யின் பொருளைக் கண்​டடை​யும் பொறுப்பை வாசகரிடமே முழு​மை​யாக ஒப்​படைக்​கிறார். இதனால், “இது ஏன் இப்​படிச் சொல்​லப்​படு​கிறது?”, “இதன் உட்​பொருள் என்​ன?” என்​பது போன்ற வினாக்​கள் வாசக​னுக்​குள் தொடர்ந்து எழுகின்​றன. அந்​தத் தர்க்க ரீதி​யான குழப்​பமே படைப்​பின் உயிர்ப்​பாக மாறி, சிந்​தனையைத் தூண்​டும் சக்​தி​யாக உரு​வெடுக்​கிறது. நவீன இலக்​கி​யம் எதை​யுமே ஒரு ‘பாட​மாகச்’ சொல்​லாமல், ஒரு ‘அனுபவ​மாகவே’ வெளிப்​படுத்​தும் என்​பதை வாசகர்​கள் உணர வேண்​டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in