அம்மா உணவகங்களை எப்படி மேம்படுத்தலாம்?

சிக்கன நடவடிக்கைக்கான அவசியம் உருவாகியிருக்கும் நிலையில், மக்களுக்கு இது கைகொடுக்கும்
அம்மா உணவகங்களை எப்படி மேம்படுத்தலாம்?
Updated on
3 min read

தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களைப் புதுப்பிக்கவும் அங்கு வழங்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்தவும் முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டிருக்கிறார். முந்தைய ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட நல்ல திட்டங்களையும் கிடப்பில் போடும் அணுகுமுறையிலிருந்து மாறுபட்டு, அம்மா உணவகங்களை மேம்படுத்தும் முதல்வரின் நோக்கம் பாராட்டுக்குரியது.

2013ஆம் ஆண்​டில் அன்​றைய தமிழ்​நாடு முதலமைச்​சர் ஜெ.ஜெயலலி​தா, அம்மா உணவகங்​களைத் தொடங்​கி​னார். நகர்ப்​புறங்​களில் நில​வும் உணவுப் பணவீக்​கத்​தால் மிக​வும் பாதிப்​படை​யும் வறிய​வர்​களுக்கு மட்​டுமின்​றி, அதற்கு அப்​பாற்​பட்​ட​வர்​களுக்​கும் இந்த உணவகங்​கள் பெரிதும் பயனளித்​தன. இன்​றைக்கு மேற்​காசி​யப் போரின் காரண​மாக, எரிபொருள் பற்​றாக்​குறை சார்ந்த கடுமை​யான சிக்​கல்​கள் உரு​வாகி​யிருக்​கின்​றன.

அதை​யொட்​டிய சிக்கன நடவடிக்​கை​களை மக்​கள் கடைப்​பிடிக்க வேண்​டிய அவசி​யம் ஏற்​பட்​டிருக்​கிறது. உணவு விலை கடுமை​யாக உயர்ந்​து​வ​ரும் நிலை​யில், உணவுப் பாது​காப்பு (food security) என்​பது பெரிய கேள்விக்​குறி​யாக மாறிவ​ரு​கிறது. குறைந்த விலை உணவு அங்​காடிகள் மூடப்​படு​வ​தால் பெரு​வாரி​யான தொழி​லா​ளர்​கள் இன்​னலுக்கு ஆளாகின்​ற​னர்.

இத்​தருணத்​தில், அம்மா உணவகங்​களை மேம்​படுத்​து​வது என்​கிற கொள்கை பெரும் ஆசு​வாசம் அளிக்​கிறது. முக்​கிய​மான இந்​தத் திட்​டத்தை எவ்​வாறு தொடர்ந்து முன்​னெடுத்​துச்​செல்​வது என்​பது பற்​றி​யும் பேசி​யாக வேண்​டும்​.

வல்லுநர்களின் பரிந்துரை

தூய்மையான, நல்ல இடுபொருள்களால் உரு வாக்கப்பட்ட, ஒரே தரநிலையில் தயாரிக்கப்பட்டுப் பரிமாறப்படும் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகள், இத்திட்டத்தை நீண்ட காலம் நிலைநிறுத்தக்கூடிய பொது நம்பிக்கையைப் பயனாளர்களிடையே உருவாக்கும்.

சிறுதானியங்கள் சார்ந்த உணவுப் பொருள்களைப் பொதுவிநியோகத்திலும் அம்மா உணவகங்களிலும் அறிமுகப்படுத்துவதன் மூலம், ஏழைகளுக்கும் மிகக் குறைந்த விலையில் ஊட்டச் சத்து மிக்க உணவை வழங்க முடியும் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

மறுசீரமைப்புத் திட்டத் தின் மூலம் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். உணவில் உள்ள ஊட்டச்சத்தின் / கலோரி அளவு, பொருள்களின் தரநிலை, தயாரிப்பு நெறிமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தெளிவான, நடைமுறைப்படுத்தக்கூடிய வரையறைகளை அரசு நிறுவ வேண்டும். மேலும் அவற்றை அனைவரும் அறியக்கூடிய வகையில் வெளியிட வேண்டும்; இதனால் குடிமக்களே கண்காணிப்பாளர்களாகவும், தரக்கட்டுப்பாட்டாளர்களாகவும் செயல்பட முடியும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in