கிரிஷ் கர்னாட்: பாரம்பரியமும் நவீனமும் இணைந்த நாடக ஆளுமை

மே 19 - கிரிஷ் கர்னாட்டின் 88வது பிறந்த நாள்
கிரிஷ் கர்னாட்: பாரம்பரியமும் நவீனமும் இணைந்த நாடக ஆளுமை
Updated on
2 min read

இந்​திய சுதந்​திரப் போராட்​டக் காலம் வரை, நம் நாட்டு நாடகத்​துறை பெரும்​பாலும் நாட்​டுப்​புற வடிவங்​களையே சார்ந்​திருந்​தது. ஆனால், நகர்​மய​மாதல், நடுத்தர வர்க்​கத்​தின் எழுச்​சி, மேற்​கத்​திய நாடகங்​களின் அறி​முகம் மற்​றும் ‘இப்​டா’ (IPTA) இயக்​கத்​தின் தோற்​றம் போன்ற காரணி​களால் இந்​தி​யக் கலை-இலக்​கியப் பார்​வை​யிலும் அணுகு​முறை​களி​லும் பெரும் மாற்​றங்​கள் ஏற்​பட்​டன.

வங்​காளத்​தில் பாதல் சர்க்​காரும், மராத்​தி​யில் விஜய் தெண்​டுல்​கரும், இந்​தி​யில் மோகன் ராகேஷும் இந்​தப் புதிய நவீன உணர்​வு​களுக்​குத் தத்​தம் மொழிகளில் வடிவம் கொடுத்​தனர். அதே​போல், கன்​னடத்​தில் கிரிஷ் கர்​னாட் இந்​தி​யச் சூழலுக்​குப் பொருத்​த​மான ஒரு புதிய எழுத்து முறையை​யும் நவீனப் பார்​வையை​யும் உரு​வாக்​கிக் காட்​டி​னார். கர்​னாடின் நாடகங்​கள் நம்​முடைய வரலாற்​றுப் பின்​புலத்​தை​யும் மண்​ணின் தன்​மை​யை​யும் அடிப்​படை​யாகக் கொண்​டிருந்​தா​லும், அவற்​றின் வடிவ​மும் கட்​டமைப்​பும் ஒரு நவீன மனதின் புதிய சிந்​தனைச் சாயலைக் கொண்​டிருந்​தன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in