விடுபட்ட உண்மைகளை எழுதுகிறேன்! - வரலாற்று ஆய்வறிஞர் செ.திவான்

கருத்துப் பேழை சந்திப்பு
விடுபட்ட உண்மைகளை எழுதுகிறேன்! - வரலாற்று ஆய்வறிஞர் செ.திவான்
Updated on
2 min read

தமிழகத்தில் சுயாதீன வரலாற்று ஆய்வறிஞர்களில் செ.திவான் முக்கியமானவர். வரலாற்றில் விடுபட்ட உண்மைகளைப் பதிவுசெய்வது இவரது தனி அடையாளம்.

திருநெல்வேலி மாவட்டத்தின் பாளையங்கோட்டையில் வசிக்கும் திவான், இதுவரை 190 நூல்கள் எழுதி, தனது சொந்தப் பதிப்பகமான ‘ரெகான் - ரய்யா’ மூலம் வெளியிட்டுள்ளார்.

‘வேலூர் புரட்சியில் வீரமிகு முஸ்லீம்கள்’, ‘பாரதி செல்லம்மாள் உயில்’, ‘பெரிய புராணத்தில் வாழ்க்கை நெறி’, ‘திராவிட இயக்கம் - வரலாற்றுக் குறிப்புகள்’ உள்ளிட்ட நூல் தலைப்புகள் இவரின் பரந்துபட்ட பார்வையை வெளிப்படுத்தும். திவானிடம் பேசியதிலிருந்து சில பகுதிகள்:

Q

வரலாற்றில் உலவுகிற கற்பிதங்களை எதிர்​கொள்ளும் சந்தர்ப்​பங்​களைக் கூற முடியுமா?

A

இந்திய விடுதலைப் போராட்​டத்தில் இஸ்லாமியர்​களின் பங்களிப்பு அவ்வள​வாகப் பேசப்​படு​வ​தில்லை. ஆங்கிலேயர்​களுக்கு எதிரான இஸ்லாமியர்​களின் போராட்​டங்​களைப் பல நூல்களில் சான்றுகளுடன் பதிவுசெய்​துள்ளேன். மருதநாயகம், புலித்​தேவன், வீரபாண்​டியக் கட்டபொம்மன், தீரன் சின்னமலை போன்ற​வர்​களின் படைகளில் இஸ்லாமியர்​களும் இருந்​தனர்.

கேரளத்தில் ஏற்பட்ட மாப்ளா இனத்தவரின் புரட்சி, இந்து - முஸ்லிம் மோதலாகத் தவறாகச் சித்தரிக்​கப்​படு​கிறது. அதைத் தெளிவுபடுத்த ‘மலபார் புரட்​சி-1921 (முதல் பாகம்)’ என்கிற நூல் எழுதினேன்.

மாப்ளாக்கள் (அரேபிய ஆணுக்கும் கேரளப் பெண்ணுக்கும் பிறந்​தவர்) ஆங்கிலேயர்​களுக்கு எதிராகப் போராடிய​போது, சரக்கு ரயிலுக்குள் அடைக்​கப்​பட்டு 70 பேர் கொல்லப்​பட்​டனர். தமிழ்​நாட்டின் போத்தனூர் ரயில் நிலையத்​துக்கு வந்த ரயிலுக்குள் இவர்கள் சடலங்களாகக் கிடந்​தனர். அவர்களில் 66 பேர் இஸ்லாமியர்கள்; நான்கு பேர் இந்துக்கள். அனைவரது விவரங்​களையும் தேடிப் பிடித்து இந்நூலில் பதிவுசெய்​துள்ளேன்.

வாஞ்சி​நாதன் குறித்து அண்மைக் காலமாகப் பரப்பப்​படும் அவதூறுகள் வருத்தம் அளிக்​கின்றன. வ.உ.சிதம்​பரனார் குறித்து 28 நூல்களை எழுதி​யுள்​ளேன். வாஞ்சி​நாதனின் தியாகத்​துக்காக வ.உ.சி.யே அவரைப் போற்றியதை மறந்து​விடக் கூடாது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in