யுவ புரஸ்கார், பால புரஸ்காருக்கும் கனவு இல்லம்

யுவ புரஸ்கார், பால புரஸ்காருக்கும் கனவு இல்லம்
Updated on
2 min read

இலக்கியத்திற்கு முதன்மை தந்து எழுத்தாளர்களைக் கொண்டாடுகிற காலத் தொடர்ச்சியில் மீமிசைச் செயல்பாடாக விருது பெற்ற எழுத்தாளர்களுக்குக் ‘கனவு இல்லம்’ திட்டம் தமிழ்நாடு அரசால் அமைந்திருக்கிறது. இப்பயன்பாட்டிற்குள் சாகித்ய அகாதமியின் ‘யுவ புரஸ்கார், பால சாகித்திய புரஸ்கார்’ விருது பெற்றவர்களைப் புறத்தே நிறுத்தி வைத்திருக்கும் பாராமுகம் ஏனென்று தெரியவில்லை.

இலக்​கி​யத்​துக்​குப் பெரும்​பங்​காற்​றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு 03-06-2021 அன்று கனவு இல்​லம்திட்​டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சாகித்ய அகாதமி, ஞானபீட விருது உள்​ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்​றவர்​கள் இந்​தத்திட்​டத்​தில் பயன்​பெறலாம் என அறிவிக்​கப்​பட்​டது. சாகித்ய அகாதமி விருது பெற்​றவர்​கள் என்று கூறிய​போது, அகாதமி​யின் அனைத்து விருதுகளை​யும் பெற்​றவர்​கள் பயன்​பெறலாம் என்றே வெளிஉல​கில்பேசப்​பட்​டது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in