

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (மே 31) அன்று ‘கருத்துப் பேழை’ பகுதியில் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ நிறுவனர் மு.வேடியப்பன் எழுதிய ‘புத்தகக் காட்சிகளில் மாற்றம் தேவை’ என்ற கட்டுரை வெளியாகி இருந்தது. அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்தப்படுவதால் பதிப்பாளர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளைச் சுட்டிக்காட்டியிருந்தார். மாவட்டந்தோறும் நடத்துவதற்குப் பதிலாக மூன்று மாவட்டங்களுக்கு ஒரு புத்தகக் காட்சி உள்ளிட்ட மாற்றுத் திட்டங்களை அவர் முன்வைத்திருந்தார். அவரது இந்த கருத்துகளுக்கு மாறாக, மாவட்டந்தோறும் நடைபெறும் புத்தகக் காட்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று சிலர் வலியுறுத்தியுள்ளனர்.