எல்லைகளைக் கடந்த இலக்கியச் சங்கமம் | புக் பிரம்மா இலக்கியத் திருவிழா – 2026

இந்திய மொழிகளுக்கும் ஆங்கில மொழிக்கும் இடையிலான  உறவு குறித்த கலந்துரையாடல் அமர்வில் பங்கேற்ற கன்னட எழுத்தாளர்கள் ஓ.எல்.நாகபூஷணசாமி, எம்.எஸ்.ஆஷாதேவி, மலையாள எழுத்தாளர் என்.எஸ்.மாதவன், ஆங்கில எழுத்தாளர் கேஷவ குஹா உள்ளிட்டோர்.

இந்திய மொழிகளுக்கும் ஆங்கில மொழிக்கும் இடையிலான உறவு குறித்த கலந்துரையாடல் அமர்வில் பங்கேற்ற கன்னட எழுத்தாளர்கள் ஓ.எல்.நாகபூஷணசாமி, எம்.எஸ்.ஆஷாதேவி, மலையாள எழுத்தாளர் என்.எஸ்.மாதவன், ஆங்கில எழுத்தாளர் கேஷவ குஹா உள்ளிட்டோர்.

Updated on
3 min read

தென்​னிந்​திய மொழிகள் மற்​றும் வங்க மொழி​யின் இலக்​கியப் பரி​மாற்​றத்தை ஊக்​கப்​படுத்​தி, மூத்த மற்​றும் இளம் படைப்​பாளி​களை ஒரே கூரை​யின் கீழ் இணைத்த ‘புக் பிரம்மா இலக்​கி​யத் திரு​விழா – 2026’, பெங்களூரு செயின்ட் ஜான்ஸ் ஆடிட்​டோரிய வளாகத்​தில் ஆகஸ்ட் 21 முதல் 23 வரை கோலாகல​மாக நடை​பெற்​றது. ஐந்து பிர​தான அரங்​கு​கள், நான்கு சிற்​றரங்​கு​களில் பல்​வேறு அமர்​வு​கள், நூல் வெளி​யீடு​கள், நேர்​காணல்​கள், கவியரங்​கு​கள், சிறார் நிகழ்​வு​கள், புத்தகக் காட்சி என இந்த மூன்று நாட்​களில் விழா வளாகம் முழு​வதும் இலக்​கியப் பரப்பு உயிரோட்​டத்​துடன் இயங்​கியது.

தொடக்க அமர்​வு​கள்: தொடக்க நாளில், திவ்யா கலவள ஒருங்​கிணைப்​பில் ஓ.எல். நாகபூஷண​சாமி, எம்​.எஸ். ஆஷாதே​வி, என்​.எஸ். மாதவன், கேஷவ குஹா பங்​கேற்ற அமர்​வில், ஆங்​கிலத்தை இணைப்​புப் பால​மாகப் பயன்​படுத்​தி​னாலும், அது தாய்​மொழிகளின் மீது ஆதிக்​கம் செலுத்த விடக்​கூ​டாது என்ற ஒரு​மித்​தக் கருத்து முன்​னெழுந்​தது.

‘நாட்​டார் கதைகளும் சமூக வரலாறும்’ அமர்வை இரா. காம​ராசு தொடங்க, அ. கலை​யரசி, என். ராமச்​சந்​திரன், என். வடிவேலன் ஆகியோர் உரை​யாற்​றினர். “மன்​னர்​களின் கால​வரிசையை மட்​டுமே வரலாறாகக் கொள்​வது முழு​மை​யா​காது, சமூகத்​தின் ஆழ்​மனப் பிர​திபலிப்​பு​களான வாய்​மொழிக் கதைகள் வழியே இடைவெளி​களை நிரப்​பும்​போதே அது பூரணத்​து​வம் பெறுகிறது” என்ற ஆழமான பார்​வையை காம​ராசு முன்​வைத்​தார். ‘என் வாசிப்​பனுபவம்’ அமர்​வில் பழனி. கிருஷ்ண​சாமி, ரமேஷ் கல்​யாண், தி.சிவக்​கு​மார், சவிதா ஆகியோர் துறை சார்ந்த முதன்மை நூல்​களை முன்​வைத்​துத் தம் அனுபவங்​களைப் பகிர்ந்​தனர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in