உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் உயிர்ப்பன்மை

உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் உயிர்ப்பன்மை
Updated on
3 min read

உலகின் உணவு உற்பத்தியானது, தற்போதைய 800 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் உணவு, ஊட்டச்சத்துத் தேவையைப் பூர்த்திசெய்யும் விதத்தில் உள்ளது. இருப்பினும் வறுமை, சமத்துவமின்மை, உணவுப் பொருள் பாதுகாப்புக் குறைபாடுகள், உள்ளூர் / உலக அரசியல் காரணமாக உலகின் பெரும்பான்மையான மக்களுக்குப் போதுமான அளவு உணவு சரிவரச் சென்றடையவில்லை.

ஐ.நா. அவையின் ‘உணவு - வேளாண்மை அமைப்பு’ (Food and Agriculture Organization-FAO) வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, உலகம் முழுவதும் தினமும் 25,000 பேர் பசி, ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக மரணமடைகிறார்கள்.மறு​புறம், முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் காலநிலை மாற்றத்தின் காரணமாக உணவு உற்பத்தி பெரும் பின்னடைவைச் சந்தித்து​வரு​கிறது.

இதைச் சமாளிக்கும் வகையில் காலநிலை மாற்றத்தை எதிர்த்து நிற்கக்​கூடிய பயிர்களை நாம் தேர்வுசெய்வது கட்டாயமாகி வருகிறது. மேலும் நிலைத்த வேளாண்மை நடைமுறைகளை (sustainable agriculture practices) விரிவுபடுத்​துதல் போன்ற நடவடிக்கைகளும் அவசிய​மாகின்றன. நிலையான உணவு உற்பத்​திக்கு உயிர்ப்​பன்மை (Bio diversity) பெருமளவில் உதவி புரி​கிறது. ஆனால், அதைப் பற்றிய புரிதல் பரவலாக இல்லை.

காட்டு உறவினங்கள்: விவசா​யத்​துக்கு அடிப்​படையான பயிர் ரகங்கள், வளமான மண், பயிர்​களின் மகரந்தச் சேர்க்கை, பூச்சி, நோயைக் கட்டுப்​படுத்​துதல் போன்ற​வற்றுக்கு உயிர்ப்​பன்மை பெரிதும் உதவுகிறது. பல்லுயிர் பாதுகாப்புதான் நிலையான உணவு உற்பத்​திக்கு அடித்தளம் என்பது உலக உணவு - வேளாண்மை அமைப்பு, உயிர்ப்​பன்மை குறித்த ஒப்பந்தம் (CBD) போன்ற​வற்றின் கூற்றாகும். குறிப்பாக, விவசாய உயிர்ப்​பன்மைப் பாதுகாப்பு என்பது தற்போதைய காலக்​கட்​டத்தில் இருக்கும் பெரும்​பான்​மையான உற்பத்தி, காலநிலை சார்ந்த சவால்​களுக்குச் சிறந்த தீர்வாக இருக்​கும்.

இன்றளவும் நாம் பயிர் செய்யும் ரகங்கள் அனைத்தும் நூற்றாண்​டு​களுக்கு முன்பு வளமான காடுகளில் இருந்து எடுக்​கப்​பட்​ட​வை​தான். நாம் பரவலாகப் பயிர்​செய்யும் உணவுத் தாவரங்​களின் காட்டு உறவினங்கள் (Crop Wild Relatives) மரபணு வளங்களின் பொக்கிஷமாக இருந்து பயிர் மேம்பாடு, உணவுப் பன்மைப்​படுத்​துதலில் முக்கியப் பங்கு வகிக்​கின்றன.

பொதுவாகவே, இந்தக் காட்டு உறவின ரகங்கள் நோய் எதிர்ப்புத்​திறன், வறட்சி, வெள்ளம், வெப்பம், உப்புத்​தன்மை போன்ற காரணிகள் ஏற்படுத்தும் அழுத்​தங்​களைத் தாங்கும் திறனை இயற்கை​யாகவே பெற்றுள்ளன. இந்தச் சிறப்புப் பண்பு​களின் மூலம் எதிர்​காலக் காலநிலை மாற்றத்​துக்கு ஏற்ப ‘காலநிலைக்குத் தாக்குப்​பிடிக்​கும்’ அடுத்த தலைமுறைப் பயிர்களை உருவாக்குவது எளிது என்கிறது விவசாயத் தொழில்​நுட்ப அறிவியல்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in