சாகித்ய அகாடமியின் தன்னாட்சிக்கு ஆபத்து

சாகித்ய அகாடமியின் தன்னாட்சிக்கு ஆபத்து
Updated on
2 min read

இந்​திய இலக்​கிய உலகின் உயரிய அங்​கீ​கார​மாகக் கருதப்​படும் 24 மொழிகளுக்​கான 2025ஆம் ஆண்​டின் சாகித்ய அகாடமி விருதுகளை அறி​விப்​ப​தற்​காக கடந்த டிசம்​பர் 18ஆம் தேதி பிற்​பகல் புது​டெல்​லி​யில் பத்​திரி​கை​யாளர் சந்​திப்​புக் கூட்​டம் நடை​பெற இருந்​தது. அதற்கு முன்​ன​தாக அகாட​மி​யின் தேசிய நிர்​வாகக் குழுக் கூட்​டம் நடை​பெற்​றது. ஒவ்​வொரு மொழிக்​காக​வும் தனித்​தனி​யாக அமைக்​கப்​பட்​டிருந்த நடு​வர் குழுக்​கள் பரிந்​துரைத்த விரு​தாளர்​கள் பட்​டியலுக்கு நிர்​வாகக் குழு ஒப்​புதல் அளித்​தது.

அதன் பின்​னர் மத்​திய கலாச்​சார அமைச்​சகத்​திட​மிருந்து வந்த திடீர் உத்​தர​வையடுத்​து, விருது பட்​டியல் அறி​விப்​ப​தற்​கான பத்​திரி​கை​யாளர் சந்​திப்​புக் கூட்​டம் ரத்து செய்​யப்​பட்​டது. இந்த நடவடிக்​கைக்கு நிர்​வாகக் குழு உறுப்​பினர்​கள் கடுமை​யாக எதிர்ப்பு தெரி​வித்​தனர். எனினும், சாகித்ய அகாட​மி​யின் 70 ஆண்டு கால வரலாற்​றில் இல்​லாத வகை​யில், முதல் முறை​யாக விருது அறி​விப்பு நிகழ்வு கடைசி நேரத்​தில் ரத்து செய்​யப்​பட்​டது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in