காலத்தினுள் பதியும் கண்கள் | கதை அறியும் கலை

காலத்தினுள் பதியும் கண்கள் | கதை அறியும் கலை
Updated on
2 min read

நாஞ்சில் ​நாடன், மனிதர்​கள் நிறம் திரிந்து போவதை வலியோடு ஆராய்​பவர். அவரது முக்​கிய​மான கதை ‘சாலப்பரிந்து’. கதை​யில், கிராமத்​தில் இட்​லி சுட்டு விற்​கும் காளி​யம்​மாள் வரு​கிறாள். ஒரு குழந்தை பெற்​றெடுத்த பிறகு, எங்கோ சென்​று​விட்ட கணவனைப் பற்றி ஒரு துப்​பும் கிடைக்​காத நிலை​யில், ஊரெல்​லாம் நடந்து இட்லி வியா​பாரம் செய்து மகனை படிக்க வைக்​கிறாள். மகனுக்கு வேலை​யும் கிடைக்​கிறது. வேலை​யில் இருக்​கும் வசதி​யான பெண் சம்​பந்​தம் வர, திரு​மணத்​தை​யும் நடத்தி வைக்​கிறாள் காளி​யம்​மாள்.

மரு​மகள் – மாமி​யாருக்​குள் நேரும் உரசலை கூர்​மை​யாக இரண்டே இடத்​தில் தொடு​கிறார் நாஞ்​சில் நாடன். அக்​கம் பக்​கத்​தில் இருப்​பவர்​கள் நாகரி​கக் குறை​வாக கருது​வ​தாக மாமி​யாரை மேல்ச்​சட்டை (ரவிக்​கை) போடச்​சொல்லி மரு​மகள் நெருக்​கு​கிறாள். அவள் அது​வரை சட்டை அணி​யாது வாழ்ந்​தவள் என்​பதே அப்​போது​தான் தெரிய வரு​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in