

இராசேந்திர சோழன்
இராசேந்திர சோழன் என்றதும் அவரது பேச்சு மொழியிலான எழுத்தும், அசலான முற்போக்கு எழுத்துக்கான யதார்த்தக் கதைகளும்தான் நினைவுக்கு வரும். புனைகதையின் பலமாக அமையும் விவரணைகள் ஏதுமின்றி, கதாபாத்திரங்களின் பேச்சு மொழியில், ஆழ்மனங்களில் மறைந்திருக்கும் மர்மத்தின் மீது வெளிச்சத்தை விழச் செய்தார். இது இராசேந்திர சோழனின் தனித்துவங்களில் ஒன்று.
அவரது, ‘தனபாக்கியத்தோட ரவநேரம்’ கதை, இந்தப் பாணியிலானது. ரவநேரம் என்றால் ‘கொஞ்ச நேரம்’ என்று பொருள். கணவன் தோட்டத்திலிருந்து வீட்டுக்கு வருகிறான். மனைவி தனபாக்கியம், கைக்குழந்தைக்காரி. இருவருக்கும் சண்டை மூள்கிறது. “ஒங்க எழவுங்கள எடுக்க... ஒங்க கருமாந்தரத்துக்க ஒழைச்சித்தான் ஓடா பூட்டனேடா! இன்னமும் அடிக்க வர்ரியேடா, பாவி நீ வெளங்குவியா”