ஆனந்த ஊர்த்வம்

ஆனந்த ஊர்த்வம்
Updated on
2 min read

சிவபெரு​மானை ஆடல் ​நாயக​ராகப் படம்​பிடிக்​கும் பத்​திமை இலக்கியங்கள், அந்த நாயகப் பொறுப்பை அவர் ஏற்ற வரலாற்​றுடன், ஆடற்​களம், ஒப்​பனை, கலைஞர்​கள், கருவி​கள் எனப் பல நுட்​ப​மான தரவு​களை​யும் பதிவுசெய்​துள்​ளன. பொதுக்​காலம் 6, 7ஆம் நூற்​றாண்​டு​களின் ஆடற்​செழு​மையை இவையே வரலாற்​றுச் சான்​றுகளாய் மின்னி வெளிச்​சப்​படுத்​துகின்​றன.

ஆடற்கலைச் சிற்பங்கள் பல்லவ அரச​ரான முதல் மகேந்​திரரின் சீயமங்​கலம் அவனி​பாஜனம் குடைவரை​யிலேயே முதன்​முதலாகக் கண்​காட்​டு​கின்​றன. சங்க ஆடலான ஒள்​வாள்​ அமலை​யும், நாட்​டிய​ சாத்​திரம் பேசும் புஜங்​கக்​கரண​மும் அவனி​பாஜனத்​தின் அரு​மை​யான படப்​பிடிப்​பு​கள். ஒரு திரு​வடியை நிலத்​திலிருத்​தி, மற்​றொரு திரு​வடியை வலப்​புறம் வீசி​யாடும் சிவபெரு​மானின் ஆடற்​கோலமே புஜங்​கக்​கரண​மாகும். இந்த ஆடலை, ‘பு​யங்​க​ராக மாநடம்’ என்​பார் சம்​பந்​தர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in