ஏஐ உதவியின் வரவும் சராசரி ஆயுள் சரிவும்! | கற்றதும் பெற்றதும் 2025

ஏஐ உதவியின் வரவும்  சராசரி ஆயுள் சரிவும்! | கற்றதும் பெற்றதும் 2025
Updated on
3 min read

உலக அளவில் மருத்துவத் தொழில்நுட்பம், மருத்துவ ஆராய்ச்சி, சுகாதார நடைமுறைகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால், பொதுச் சுகாதாரம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்துவருகிறது. 2025இல் சுகாதாரப் பராமரிப்பின் மக்கள் பரப்பை அதிகப்படுத்துவதற்கும், பயனாளர்களை அணுகும் விதம், மருத்துவப் பணியாளர்களின் செயல்திறன், பயனாளர்களுக்கு ஏற்படும் பலன்கள் போன்றவற்றை மேம்படுத்துவதற்கும் பல கண்டுபிடிப்புகள் உதவியுள்ளன.

ஏஐ செய்யும் புரட்சி: மருத்​துவர்கள் நோயைக் கண்டறிதலில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) புரட்சியை ஏற்படுத்​திவரு​கிறது. இயந்திரக் கற்றல் மூலம் திறன் பெற்றுள்ள கணினிகள், பயனாளர்​களின் பரிசோதனைப் படங்களைப் பகுப்​பாய்வு செய்வ​தி​லும், முடிவு​களைத் தீர்மானிப்​ப​தி​லும், மேம்பட்ட சிகிச்​சையைப் பரிந்துரைப்​ப​தி​லும், மருத்​துவத் தரவுகளைச் சேமிப்​ப​திலும் மனித ஆற்றலை​விடப் பல மடங்கு அதிகத் திறன் கொண்டுள்ள​தால், பல்வேறு அசாதா​ரணங்​களைத் தெளிவாக அடையாளம் காண முடிகிறது; துல்லியமாக நோயைக் கணிக்க முடிகிறது; சிகிச்சை முறையை விரைவாகத் தீர்மானிக்க முடிகிறது.

ஆரம்பநிலைப் புற்று​நோய்கள் முதல் இதயநோய்​கள்வரை பலவித உடல்நலப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறியும் ஏஐ தொழில்​நுட்பம் நோய்த் தடுப்பு மருத்​துவத்​துக்குப் புதிய வலுசேர்த்​துள்ளது.

தொலைநிலை மருத்​துவத்தில் முன்னேற்றம்: மருத்​துவர்கள் இல்லாத இடங்களில் அல்லது மருத்​துவப் பயனாளர்கள் மருத்​துவரை நேரடி​யாகச் சந்திக்க இயலாத சூழல்​களில் ‘டெலிமெடிசின்’ என்னும் தொலைநிலை மருத்​துவம் நடைமுறைக்கு வந்தது. குறிப்பாக, கரோனா பெருந்​தொற்றின்போது இந்தச் செயல்முறை கோடிக்​கணக்​கானவர்​களுக்குப் பலன் தந்தது.

பயனாளர்கள் மெய்நிகர் ஆலோசனை​களைப் பெறுவது, மெய்நிகர் பரிசோதனைகளை மேற்கொள்வது, தகுந்த சிகிச்சை​களைப் பெறுவது, பிந்தைய கவனிப்பைத் தொடர்வது போன்ற​வற்றில் கணிசமாக முன்னேற்றம் அடைந்த தொலைநிலை மருத்​துவம், பயனாளர்கள் மருத்​துவ​மனைக்கு வருகை புரிவதையும் அவர்களின் காத்திருப்பு நேரத்தையும் பெரிதும் குறைத்தது.

இப்போது அவற்றையெல்லாம் தாண்டி, மருத்​துவர்கள் தொலைவில் இருந்து​கொண்டே நோயாளி​களுக்கு அறுவைசிகிச்​சையும் மேற்கொள்ள முடியும் என்பதை உறுதி​செய்​துள்ளது. இதற்கு எடுத்​துக்​காட்டாக, இந்தியாவில் மருத்​துவர் சந்திரமோகன் வாடி ‘ரோபாட்டிக் டெலிசர்​ஜரி’யில் உலகிலேயே முதன்​முறை​யாக ஒரு குழந்தைக்குச் சிறுநீரக வடிகுழாய் அடைப்பை நீக்கிய சிகிச்​சையைச் சொல்லலாம்.

மேம்பட்டு​வரும் தனிப்​பயனர் மருத்​துவம்: 2025இல் எழுச்சிபெற்றுள்ள பொதுச் சுகாதார மருத்​துவம் எதுவென்​றால், தற்போது மேம்பட்டு​வருகிற தனிப்​பயனர் மருத்​துவம்தான் (Personalized Healthcare). ஒரு நோய்க்குப் பொதுவான சிகிச்​சையைப் பெறுவதை​விடத் தனி பயனாளர் ஒருவருக்கு எந்தவிதமான சிகிச்சை தேவை என்பதைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவதே சாலச் சிறந்தது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in