நூற்றாண்டில் நூறு நூல்கள் | சென்னை புத்தகத் திருவிழா 2026

நூற்றாண்டில் நூறு நூல்கள் | சென்னை புத்தகத் திருவிழா 2026
Updated on
1 min read

சுயமரி​யாதை இயக்​கத்​தின் நூற்​றாண்டை முன்னிட்டு, ஆழி பதிப்​பகம் 100 திராவிட இயக்க நூல்களை வெளி​யிட்​டுள்​ளது, இந்த ஆண்டு சென்னை புத்​தகக் காட்​சி​யின் பேசுபொரு​ள் ​களில் ஒன்றாகி​யுள்​ளது. அரசி​யல், சமூகம், வரலாறு, மொழிபெயர்ப்புகள் எனப் பல வகைகளில் புத்​தகங்களை வெளி​யிட்டு​வ​ரும் ஆழி பதிப்​பகம், சென்னை புத்​தகக் காட்​சியை முன்னிட்டு ‘திராவிட நூலகம்’ என்கிற நூல் வரிசை​யில் 100 புத்​தகங்களை வெளி​யிட்​டுள்​ளது.

இந்தப் புத்​தகங்கள் வரிசை​யில், 1916இல் நீதிக் கட்சி​யின் தொடக்​கத்​தில் வெளி​யிடப்​பட்ட, பார்ப்​பனரல்​லாதோர் அறிக்கை இடம்பெற்றுள்​ளது. நீதிக்​கட்சி, சுயமரி​யாதை இயக்​கம், திரா​விடர் கழகம், திமுக ஆகிய அமைப்பு​களின் தலைவர்​கள், அறிஞர்கள் எழுதிய நூல்கள் இடம்பெற்றுள்ளன. அறிஞர் அண்ணா​வின் அரசியல் சமூகப் புத்​தகங்​களும் நாவல்​கள், நாடகங்​கள், சிறுகதைத் தொகுப்பு​களும் வாசகர்​களிடையே பெரிய வரவேற்​பைப் பெற்றிருக்​கின்றன. கலைஞரின் ‘நெஞ்​சுக்கு நீதி’ ஆறு பாகங்​களும் இந்தத் தொகுப்​பில் இடம்​பெற்றுள்ளன. அவரது ‘குறளோ​வி​யம்’, ‘சங்கத்​தமிழ்’, ‘தொல்​காப்​பியப் பூங்கா’, ‘திருக்​குறள் உரை’ ஆகிய​வை​யும் இடம்​பெற்றுள்ளன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in