

அமெரிக்க நாடக வரலாற்றில் பலர் சாதித்திருக்கிறார்கள். அவர்களிடம் இருந்தெல்லாம் உந்துதல் பெற்றிருப்பினும், பின்னர் வந்த ஆகஸ்ட் வில்சனின் சாதனை மேலோங்கி நிற்கிறது.
பிராட்வே தியேட்டரில் 1959இல் முதன்முதலாக நாடகத்தை அரங்கேற்றியபோதே, வசூலில் சாதனை படைத்தவர் கறுப்பினப் பெண் நாடகாசிரியர் லோரே ஹேன்ஸ்பெர்ரி (Lorraine Hansberry). வெள்ளையினத்தவரின் வன்கொடுமைகளை 1961களிலிருந்து நாடகங்களில் துணிச்சலாக வெளிச்சம் போட்டுக் காட்டியவர் கறுப்பினத்தின் அமீர் பராகா (Amiri Baraka).
இவர்களிடமிருந்து உந்துதலைப் பெற்றவர்தான் ஆகஸ்ட் வில்சன். கறுப்பினத்தவரின் வாழ்வியலை வரலாற்றோடு இணைத்து, 10 நாடகங்களாக அரங்கேற்றிய இவரது சாதனை தன்னிகரற்றுத் திகழ்கிறது.
ஆப்ரகாம் லிங்கன் ஆப்பிரிக்கர்களை அடிமை முறையிலிருந்து விடுவித்தாலும் கொடுமைகள் நீடித்தன. 1965இல்தான் கறுப்பினத்தவர் மீதான தடைகள் நீக்கப்பட்டன; வாக்குரிமை வழங்கப்பட்டது. ‘நீக்ரோ’வென அழைக்கத் தடை விதிக்கப்பட்டது.