Published : 28 May 2023 08:21 AM
Last Updated : 28 May 2023 08:21 AM
அசோகமித்திரனின் கவனம்பெற்ற கதைத் தொகுப்புகளில் ஒன்று, ‘விமோசனம்’. அசோகமித்திரன் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியிருக்கிறார். எழுத்தையே முழுநேர வேலையாகக் கொண்ட தைரியசாலி அவர். யதார்த்தவாதக் கதைகளின் காலகட்டமான 1960களில் அவர் எழுதிய கதைகளின் தொகுப்பு இது.
இந்தத் தொகுப்பில் பன்னிரண்டு கதைகள் உள்ளன. அசோகமித்திரனின் கதையின் பின்னணி, நடுத்தரவர்க்க வாழ்க்கைதான். நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்சினை, பலவீனம் என அவர்களது உலகத்தைக் காட்சிப்படுத்துவது அசோகமித்திரன் எழுத்தின் விசேஷமான அம்சம். வெளியிலிருக்கும் பிரம்மாண்டமான அரசியல், சமூக மாற்றங்களை எல்லாம் அந்த நடுத்தர வர்க்க வாழ்க்கைக்குள் உண்டாக்கும் விளைவு என்ற மட்டத்தில்தான் அசோகமித்திரன் தன் கதைகளுக்குள் பதிவுசெய்கிறார். அவரது கதைகளில் பெண்கள் படும்பாடு வேதனையுடன் பதிவுசெய்யப்படுவது பொதுவான அம்சம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!