Published : 21 May 2023 09:06 AM
Last Updated : 21 May 2023 09:06 AM

ப்ரீமியம்
அஞ்சலி | வேட்டை எஸ்.கண்ணன் (1952-2023): ஒரு மார்க்ஸிய லட்சியவாதி

1990களின் மத்தியில் அல்லது அதற்கு முன்பான 1987களில் நிகழ்ந்த ரஷ்ய சோஷலிச வீழ்ச்சிக்குப் பிந்தைய இளம்பருவக் கோளாறுகளில் அந்நியமாகியும் குடும்பம் உள்ளிட்டான இருத்தலியல் பிரச்சினைகளில் புதிய நவதாராளவாதப் பண்புகள் மேலோங்கின. அப்போது, கலை-இலக்கியம், அனைத்துத் துறைகளிலும் பன்மைப்பட்ட கருத்தியல் மோதல்கள் உருவாகியிருந்த காலத்தில், மாற்றுகள் குறித்த அவதானங்களில் நாங்கள் இருந்தோம். அப்போது, சென்னையிலிருந்து அடிக்கடி திண்டுக்கல்லுக்கு வந்துபோன அசிரத்தையான காலங்களில் எங்களுக்கு அறிமுகமானவர்தான் வேட்டை கண்ணன்.

இரவில் அவர் உறங்கும்போது தட்டி எழுப்பினால்கூட கார்ல் மார்க்ஸின் ‘லுயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமே’ரிலிருந்து சட்டெனத் தனது பேச்சைத் தொடங்கிவிடுவார். திண்டுக்கல்லில் அவரை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பர்கள் பலரும் ஒரு பழைய மார்க்ஸிய லெனினிய (எம்.எல்.) இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றே அறிமுகப்படுத்தினார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x