Published : 07 May 2023 07:59 AM
Last Updated : 07 May 2023 07:59 AM

ப்ரீமியம்
அஞ்சலி: காரைக்குடி மணி | மிருதங்கத்தை நடுநாயகப்படுத்திய கலைஞர்!

கர்னாடக இசை உலகில் மிருதங்கச் சக்கரவர்த்தியாக 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னுடைய மேதைமையான பங்களிப்பைச் செலுத்தியவர் காரைக்குடி மணி. அவரின் தந்தை டி.ராமநாதனே அவருக்கு முதல் குருவாக வாய்த்தது பெரும் பாக்கியம். அதன்பின், காரைக்குடி ரங்கு, டி.ஆர்.ஹரிஹரன், கே.எம்.வைத்தியநாதன் ஆகிய இசை மேதைகளிடம் தன்னுடைய மிருதங்க வாசிப்பை மணி மெருகேற்றிக்கொண்டார்.

மூத்த இசைக் கலைஞர்கள் வகுத்துக்கொடுத்த மரபுகளையும் விட்டுவிடாமல் அதேநேரம், மிருதங்கம் வாசிப்பதில் தன்னுடைய தனிப்பட்ட முத்திரையையும் பதித்து, மிருதங்க வாசிப்பில் ‘காரைக்குடி பாணி’ என்பதை இசை உலகத்தில் பரவச் செய்தார். அவரின் இளமைக் காலத்திலேயே அந்நாளில் புகழுடன் விளங்கிய எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள், எம்.எல்.வசந்தகுமாரி, மதுரை சோமு, டி.எம்.தியாகராஜன், டி.கே.ஜெயராமன், வயலின் மேதை லால்குடி ஜெயராமன் உள்ளிட்ட பல இசை மேதைகளுக்கும் பக்கவாத்தியமாக மிருதங்கம் வாசித்திருக்கிறார். இவர்களுக்கு அடுத்த தலைமுறைக் கலைஞர்களுக்கும் இன்றைய இளம் தலைமுறையினருக்கும் காரைக்குடி மணியின் மிருதங்கம் இசை மேடைகளில் பக்கபலமாக இருந்திருக்கிறது என்பதிலேயே இவரின் இசையின் இளமையையும் வயதையும் உணர்ந்துகொள்ள முடியும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x