Published : 26 Mar 2023 08:32 AM
Last Updated : 26 Mar 2023 08:32 AM
வியாசர் இயற்றிய மகாபாரதம் ஒரு மாபெரும் இதிகாசப் பிரதி. நவீன இலக்கியத்திற்கு இன்றுவரை கதைகளைக் கையளித்துக் கொண்டிருக்கும் சுரங்கம். பல்வேறு முரண்பாடுகளும் விடுபடல்களும் இடைச்செருகல்களும் கொண்ட அப்பிரதியே இந்திய மரபின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. வியாசர் மகாபாரதத்தை எழுதி முடித்தபோது தற்போதைய வடிவத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் வியாசர் அதற்கு ‘ஜெய’ என்றே பெயர் சூட்டியிருக்கிறார். சூதர்கள் எனப்படும் புராணப் பிரசங்கிகள்தாம் வியாசரின் ‘ஜெய’த்தை மகாபாரதமாக வளர்த்தெடுத்தார்கள். அவர்கள்தாம் பரத வம்சக் கதையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள்; அந்தப் பிரதியின் மீது கவனத்தை உருவாக்கியவர்கள். அப்படியொரு பிரசங்கி மரபில் வந்தவர்தான் ‘மகாபாரத வசன காவிய’த்தை உருவாக்கிய சண்முகக் கவிராயர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT