Published : 19 Feb 2023 06:38 AM
Last Updated : 19 Feb 2023 06:38 AM

ப்ரீமியம்
பல்லவ மன்னன் மகேந்திரர்: கலைஞர்களின் கலைஞர்

இரா. கலைக்கோவன்

சோழ மன்னன் இராஜராஜர் அளவிற்குப் பல்லவ மன்னன் மகேந்திரர் மக்கள் உள்ளங்களில் இடம்பெறாமைக்குச் ’சிவகாமியின் சபத’த்தின் கதைப்போக்கும் ஒரு காரணம். காதலில் தோய்ந்த இளம் உள்ளங்களைப் பிரிப்பவராகவும் போரில் தோற்பவராகவும் அப்புதினத்தில் மகேந்திரர் காட்டப்பட்டிருப்பார். கதையின் புனைவிற்கும் வரலாற்றின் உண்மைக்கும் இடையில்தான் எத்தனை இடைவெளி! அது கல்கியின் கற்பனைப் படைப்பு என்பதும் பல்லவர் தலைநகரான காஞ்சிக்குள் இரண்டாம் புலிகேசி நுழையவேயில்லை என்பதும் புதினம் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எனில், மகேந்திரர் யார்? அவரைப் பற்றிய அறிமுகம் தேவைதானா? எளிய மக்களின் வாழ்வியலைத் தேடி வரலாறு பயணிக்கத் தொடங்கியிருக்கும் இந்தக் காலத்தில் ஓர் அரசரைப் பற்றிய படப்பிடிப்பு ஏன்? கேள்விகள் இப்படிப் பலவாக எழுந்தாலும், விடை ஒன்றுதான். மகேந்திரர் வரலாற்றை உருவாக்கிய மக்கள் மன்னர். தம் காலத்தின் சமூக நிகழ்வுகளை நாடகங்களாகவும் சமயச் சிந்தனைகளைச் சிற்பங்களாகவும் படைத்த புதுமை விரும்பி. மகேந்திரருக்கு முன்னால் வடதமிழ்நாட்டில் கற்கோயில்கள் இல்லை. செங்கல், மரம், உலோகம், சுதையாலான கட்டமைப்புகளே வழக்கிலிருந்த அக்காலத்தே, அழியாத கட்டமைப்புகளைக் கல்லில் உருவாக்கிய முதல் அரசராக மகேந்திரர் பொலிகிறார். விழுப்புரத்திற்கு அருகிலுள்ள மண்டகப்பட்டு எனும் சிற்றூரில் பெரும் பாறையொன்றைக் குடைந்து அவரால் உருவாக்கப்பட்ட கோயில்தான் இப்பகுதியில் தோன்றிய முதல் குடைவரை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x