Last Updated : 19 Jan, 2023 06:49 AM

 

Published : 19 Jan 2023 06:49 AM
Last Updated : 19 Jan 2023 06:49 AM

ப்ரீமியம்
வரலாற்றை ஏன் புனைவாக எழுத வேண்டும்?

கல்கி எழுதிய முதல் சரித்திர நாவல் ‘பார்த்திபன் கனவு’. 1942ஆம் ஆண்டு இந்த நாவல் தொடராக வெளிவந்தபோது இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்தது. உலகின் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியமாகத் திகழ்ந்த பிரிட்டனை, ஜப்பானும் ஜெர்மனியும் பல இடங்களில் மண்டியிட வைத்த காலகட்டம். இந்தச் சூழலைப் பயன்படுத்தி பிரிட்டனிடமிருந்து இந்தியா விடுதலை பெற வேண்டுமென்று நேதாஜி போன்ற தலைவர்கள் அறைகூவல் விடுத்தனர்.

பொ.ஆ. 9ஆம் நூற்றாண்டிலும் தமிழகத்தில் இதே போன்ற சூழல் நிலவியது. தமிழகத்தைக் கைப்பற்றி, ஆட்சி நடத்திய பல்லவர்களை வெளியேற்ற மண்ணின் மைந்தர்களான சோழர்கள் முயன்றனர். அதற்கான முன்னெடுப்புகளைச் சோழ இளவரசன் எடுக்க வேண்டுமென்று அரசன் பார்த்திபன் விரும்பினான். ‘பார்த்திபன் கனவு’ தொடராக வந்தபோது படிப்பவர் அனைவரும் இந்திய விடுதலைப் போராட்டம் செல்ல வேண்டிய வழி குறித்துப் புரிந்துகொண்டனர். சுதந்திரத் தீ எட்டுத்திக்கும் பரவிய காலத்தில் ‘பார்த்திபன் கனவு’ சமகாலத்தைப் பிரதிபலிக்கும் நாவலாகவே பார்க்கப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x