Published : 13 Jan 2023 06:47 AM
Last Updated : 13 Jan 2023 06:47 AM
தமிழ் மொழியின், பண்பாட்டின் தனிச் சொத்து கி.ராஜநாராயணன். எழுத்தாளர், கதைசொல்லி, நாட்டார் வழக்காற்றியலாளர் என எப்படியெப்படியோ சொல்லிப் பார்த்தாலும் இவை எவற்றுக்குள்ளும் அடக்கிவிட முடியாத ஓர் மாபெரும் ஆளுமை கி.ரா. கடிதம், கதைகள், வழக்குச் சொல்லகராதி, நாட்டார் கதைகள் எனத் தன் பலவிதமான செயல்பாடுகளால் தமிழுக்குப் பெருங்கொடை அளித்துள்ளார். கிரா தன் கதைகள் வழி ஒரு காலகட்டத்தை, மக்கள் பண்பாட்டைத் திருத்தமாகப் பதிவுசெய்துள்ளார்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கோவில்பட்டிக்கு ரயில் வந்தபோது மக்கள் மாட்டுவண்டியும் கெட்டுச் சோறும் கட்டிக்கொண்டு அதைப் பார்க்கப் போன சுவாரசியமான நிகழ்ச்சியை கிரா தன் நாவலில் சொல்லியுள்ளார். தமிழ்நாட்டில் விஜயநகரப் பேரரசு அமைந்த காலகட்டத்தில் மக்கள் இடப்பெயர்வையும் புதிய பண்பாட்டின் தொடக்கத்தையும் பதிவுசெய்துள்ளார். தன் சிறுகதைகள் வழி சாமானியர்களின் வாழ்க்கையை எளிய மொழியில் சொல்லியுள்ளார். கரிசல் நிலத்தின் தனித்துவத்தைப் போல எடக்கு அவரது கட்டுரை மொழியின் விசேஷமான அம்சம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT