Published : 20 Dec 2022 06:51 AM
Last Updated : 20 Dec 2022 06:51 AM

ப்ரீமியம்
கௌரவ விரிவுரையாளர்கள்: இனியும் வஞ்சிக்கப்படலாமா?

சே.சோ.இராமஜெயம்

அண்மைக் காலமாக உயர்கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க சீர்திருத்த நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டிருக்கிறது. குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்குத் தமிழ் மொழியைக் கட்டாயப் பாடமாக்கியது, தமிழ் படித்தவர்களின் உள்ளத்தில் புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது; அதே நேரத்தில், அங்கு தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ள பேராசிரியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.25,000 வழங்கப்படும் என்கிற அறிவிப்பு, கல்வியாளர்களின் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.

நிரந்தரப் பேராசிரியர்களை நியமிக்காமல் அந்த இடத்துக்குத் தற்காலிக அடிப்படையில் பேராசிரியர்களைப் பணியமர்த்தி, சொற்ப ஊதியத்தை அவர்களுக்கு அளிக்க முற்படுவதுதான் அந்த அச்சத்துக்கான நியாயமான காரணம். நிரந்தரப் பேராசிரியர்களுக்கு இணையான வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழலில், இது மிகக் குறைவான ஊதியம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனில், இதை முழு மனதுடன் எப்படி வரவேற்க முடியும்?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x