Published : 16 Dec 2022 06:49 AM
Last Updated : 16 Dec 2022 06:49 AM

ப்ரீமியம்
காதல், கண்ணியம் மற்றும் சர்ச்சை!

கத்தார் நாட்டில் நடைபெற்றுவரும் 2022 ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய ஜாம்பவான்களுடன் குரோஷியா, மொராக்கோ அணிகள் அரையிறுதியை எட்டியது, இந்த உலகக் கோப்பையின் இனிய ஆச்சரியம். வரும் ஞாயிறு அன்று நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் நடப்பு சாம்பியன் பிரான்ஸும் மோதவிருக்கின்றன. ஒட்டுமொத்த உலகின் கவனமும்இறுதிப் போட்டி நடைபெறவிருக்கும் லுஸேல் மைதானத்தின்மீது குவிந்திருக்கிறது.

தடைகளும் எதிர்க்குரல்களும்: காதல் - மத, இன, மொழி, பாலின வேறுபாடுகள் அறியாதது கால்பந்து விளையாட்டு. ஆனால், உலகக் கோப்பையின் அதிகாரபூர்வ கீதமான, ‘Better Together’ மூலம் எல்லோரும் ‘ஒன்றிணைந்து சிறப்படைய’ ஃபிஃபா அழைத்தாலும், பால் புதுமையினர் பார்வையாளராக வருவதற்குக் கத்தார் தடை விதித்தது நெருடலைத் தந்தது. தொழில்நுட்பரீதியாகவும் கட்டமைப்பு வசதிகளிலும் முன்னேறியிருக்கும் கத்தார், பழமைவாதங்களில் தங்கிவிட்டிருப்பதற்கு இதுவே சான்று.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x