Published : 04 Dec 2022 06:22 AM
Last Updated : 04 Dec 2022 06:22 AM

ப்ரீமியம்
இராசேந்திர சோழனின் எழுத்து ராஜ்ஜியம்

திலகவதி

விளிம்புநிலை மனிதர்கள் எதிர்கொள்ளும் அல்லல்களையும் அவர்களின் உளவியல் சிக்கல்களையும் தன் எழுத்துகளில் அழுத்தமாக முன்வைத்தவர் இராசேந்திர சோழன். தமிழில் இதுவரை பலரும் அறிந்திராத எளிய மனிதர்களின் வாழ்வு, அன்றாடப்பாடுகள், அதை அவர்கள் போகிற போக்கில் எப்படிக் கையாள்கிறார்கள் என விரியும் இராசேந்திர சோழனின் படைப்புகள் அத்தனையும் நம்மைப் பிரமிக்க வைப்பவை. அவற்றைத் தம் படைப்புகளில் காட்சிப்படுத்தியதில் அவருடைய பாணி தனித்துவமானது.

இராசேந்திர சோழன் ஒரு படைப்பாளி மட்டுமல்ல, களப்போராளி. ஆசிரியர் பயிற்சி முடித்த இராசேந்திர சோழன், மயிலம் ஒன்றியத்தில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றினார். கோடை விடுமுறை முடிந்தது. ஆனால், அவர் மீண்டும் பணியில் அமர்த்தப்படவில்லை. பள்ளி நிர்வாகம் என்னென்னவோ காரணங்களை அடுக்கியது. ஒரு முடிவெடுத்தார். அந்த இளம் வயதிலேயே, தனக்குத் திரும்ப ஆசிரியர் பணி வேண்டும் என்ற கோரிக்கையோடு நீதிமன்றப் படியேறினார்; வழக்கில் வெற்றிபெற்று மீண்டும் பணிக்குத் திரும்பினார். ஒரு லட்சியத்தோடு வாழ்ந்துகொண்டிருப்பவர் இராசேந்திர சோழன். அவர் செய்துகொண்டது சாதி மறுப்புத் திருமணம். மார்க்சியத்தில் ஈடுபாடுகொண்ட அவர், கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். ‘செம்மலர்’ மாத இதழில் ‘அஸ்வகோஷ்’ என்ற பெயரில் பல சிறுகதைகளை எழுதினார். ‘இயக்க வாழ்க்கை, இலக்கியத்துக்குச் சாபக்கேடு’ என்பது எழுத்தாளர் இராசேந்திர சோழனுக்கு முற்றும் பொருந்தும். இயக்க வேலைகளும் பொதுநலப் பணிகளும் அவரை எழுதவிடாமல் பெருமளவு கட்டிப்போட்டன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x