Published : 24 Nov 2022 06:52 AM
Last Updated : 24 Nov 2022 06:52 AM

ப்ரீமியம்
நமக்கான நீலப் பொருளாதாரம்

காலகாலமாகவே கடல்வளத்தை மனிதன் வேட்டையாடி வந்தாலும், தனது பழங்குடித் தன்மையால் அந்த வளத்துக்கு இடையூறு வராமல் பார்த்துக்கொண்டான். ஆனால் கடந்த நூற்றாண்டுகளில் கல்வியறிவால் தொழில்நுட்பமும் வளர, இயற்கை வளங்களைச் சூறையாடும் மனிதனின் வேட்கை எண்ணெய்க்காகத் திமிங்கலங்களை வேட்டையாடியது, பொழுதுபோக்குக்காக மீன்களைக் கொன்றுகுவிப்பது என நீண்டது. மீன்பிடித்தலில் கடல்வளத்தை பாதிக்காத செவுள்வலை, தூண்டில் தொழில் மாறி, இழுவைமடிப் பயன்பாட்டால் மீன் இனப்பெருக்கமே பாதிப்புக்குள்ளானது.

அண்மைக்கடல் பகுதியில் ராட்சத ஆழ்குழாய்க் கிணறுகளைத் தோண்டி எரிவாயுவும் கச்சா எண்ணெயும் எடுத்தது கடலின் அடியாழத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. கடலோரங்களில் இயற்கையாய்ச் சேர்ந்திருந்த கனிமங்களை வியாபார வேட்கையில் பிரித்தெடுத்து ஏற்றுமதி செய்தது, கடலோரங்களில் கதிரியக்கத்தால் பல நோய்கள் அதிகரிக்கக் காரணமானது. ஆயுதங்களைப் பரிசோதிப்பதும் போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதும் ஆலை, சுற்றுலாக் கழிவுகளைக் கொட்டி கடலை மாசுபடுத்துவதும் தொடர்ச்சியாய் நிகழ்ந்தன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x