Published : 21 Nov 2022 06:47 AM
Last Updated : 21 Nov 2022 06:47 AM

ப்ரீமியம்
புத்துயிர் பெறவேண்டும் நாடகக் கலை!

பெ.பெரியார்மன்னன்

தமிழர்களின் விருப்பத்துக்குரிய ஊடகமாக விளங்கிய நாடக்கலை, கைபேசிகளின் பரவலாக்கத்தால் சுவடில்லாமல் நலிந்து கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் நாடக சபாக்களாலும் மன்றங்களாலும் தமிழகம் நிறைந்திருந்தது; கிராமத் திருவிழாக்களில் நாடகங்கள் தவறாமல் இடம்பெற்றன. திரைப்படங்கள் பரவலாகத் தொடங்கியதும் நாடக நடிகர்களே பெரும்பாலும் திரைப்பட நடிகர்களாக மாறினர். தொலைக்காட்சி வந்தது, நாடகம் வேகமாக வீழ்ந்தது.

கைபேசிகளின் பரவலான பயன்பாட்டால் மக்கள் சமூக வலைத்தளங்களிலும் காணொளித் தளங்களிலும் செலவிடும் நேரம் அதிகரித்திருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை மக்கள் விரும்பிய நேரடிக் காட்சி ஊடகமான நாடகக்கலை, இருந்த இடம் இப்போது தெரியவில்லை. கிராமங்கள் தோறும் காணப்பட்ட நாடக மன்றங்களும், உள்ளூர் நாடக நடிகர்களும் எங்கே போனார்கள் எனத் தெரியவில்லை. இருப்பினும், நாடகக்கலைமீது தீவிர ஈடுபாடு கொண்ட நாடகக் கலைஞர்களும் ரசிகர்களும் சமூக, வாழ்வியல், வரலாற்று நாடகங்களை அவ்வப்போது அரங்கேற்றிவருகின்றனர். குறிப்பாக, சேலம் மாவட்டம் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் பகுதி கிராமங்களில் கோவில் திருவிழாக்களில் நாடகங்களின் அரங்கேற்றம் இன்றும் தொடர்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x