Published : 18 Nov 2022 06:51 AM
Last Updated : 18 Nov 2022 06:51 AM
டெல்லியில் அதிகரித்துவரும் காற்று மாசுபாட்டுக்கு அண்டை மாநிலங்களில் உள்ள விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பது காரணம் அல்ல; கட்டுமானப் பணிகள், தொழில்துறை வெளியிடும் மாசு, வாகனங்கள் வெளியிடும் புகை ஆகிய நகா்ப்புறக் காரணிகளே காற்று மாசு அதிகரிக்க முக்கியக் காரணம் என உச்ச நீதிமன்றம் 2021 நவம்பர் 15 அன்று கூறியுள்ளது. ஆனால், டெல்லியில் தற்போது ஏற்பட்டுள்ள மிக மோசமான காற்று மாசுபாட்டுக்கு பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் பயிரின் கழிவுகளை எரிப்பதுதான் முக்கியக் காரணம் எனப் பெரும் விவாதங்கள் நடக்கின்றன.
முக்கியக் காரணங்கள்: ஏறக்குறைய கடந்த 20 ஆண்டுகளாகக் காற்று மாசுப் பிரச்சினையை டெல்லி தொடர்ந்து சந்தித்துவருகிறது. டெல்லியின் காற்றுத் தரம், வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பின் (SAFAR) சமீபத்திய தரவுகளின்படி, காற்றின் PM10, PM2.5 துகள்களின் அளவுகள் (PM என்பது Parts per million அதாவது, பத்து லட்சத்தில் ஒரு பங்கு) 100, 60 என்ற பாதுகாப்பான வரம்புகளுக்கு மேலாக, ஒரு கன மீட்டருக்கு முறையே 876 - 680 மைக்ரோகிராம்களை எட்டியுள்ளதாகக் கூறுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT