Published : 15 Nov 2022 06:45 AM
Last Updated : 15 Nov 2022 06:45 AM

ப்ரீமியம்
ஜி20: வலுப்பெறும் இந்தியாவின் உலகத் தலைமை!

இந்தோனேசியாவின் பாலி நகரில் நவம்பர் 15, 16 தேதிகளில் நடக்கும் ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில், 2023ஆம் ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்கவிருக்கிறது. இந்தோனேசியாவிடம் இருந்து இந்தியாவுக்குக் கைமாறும் தலைமைப் பொறுப்பு, டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து செயல்பாட்டுக்கு வருகிறது. ஜி20 தலைமையின்போது, நாடு முழுவதும் பல இடங்களில் 32 வெவ்வேறு துறைகளில் சுமார் 200 கூட்டங்களை இந்தியா நடத்தவிருக்கிறது; 2023 நவம்பரில் புது டெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாடு, இந்தியாவால் நடத்தப்படும் மிக உயரிய சர்வதேசக் கூட்டங்களில் ஒன்றாக அமையும்.

உலக ஒட்டுமொத்த உற்பத்தியில் 80%, சர்வதேச வர்த்தகத்தில் 59-77%, உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு, உலக நிலப்பரப்பில் 60% ஆகிய அளவுகோல்களுடன் தொழில்துறையில் வளர்ந்த, வளர்ந்துவரும் உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளை உள்ளடக்கியது இந்த ஜி20 கூட்டமைப்பு. இந்தியா, சீனா, அமெரிக்கா, கனடா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா, மெக்சிகோ, தென் கொரியா, இந்தோனேசியா, ஜப்பான், துருக்கி, சவூதி அரேபியா ஆகிய 19 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் ஜி20 கூட்டமைப்பின் உறுப்பினர்களாகும். ஜி20 கூட்டமைப்பு நிறுவப்பட்ட 1999 இல் அதன் உறுப்பினராக இணைந்த இந்தியா, முதல் முறையாக அதன் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருப்பது உலக அரசியலில் அதன் இடம் வலுப்பெறுவதை உணர்த்துகிறது. ஜி20 மாநாடு 2021ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் நடைபெறவிருந்தது. ஆனால், 75ஆவது சுதந்திர தினத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில், அதை 2022-க்கு மாற்றும்படி இந்தியா விடுத்திருந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x