Published : 14 Nov 2022 06:49 AM
Last Updated : 14 Nov 2022 06:49 AM

ப்ரீமியம்
இடையிலாடும் ஊஞ்சல் - 5: நடுத்தர வர்க்கம் பெருகுவது யாருக்கு நல்லது?

நம் நாட்டின் கொள்கைகளை வடிவமைப்பதிலும் திசைவழியைத் தீர்மானிப்பதிலும் நடுத்தர வர்க்கம் முக்கியப் பங்காற்றிவந்திருக்கிறது. நேர்மறை, எதிர்மறை வளர்ச்சிப் போக்குகளைத் தீர்மானிக்கும் வர்க்கமாக அது இருக்கிறது. 2004-05இல் மக்கள்தொகையில் 14% இருந்த நடுத்தர வர்க்கம், 2021இல் 31%ஆக உயர்ந்திருப்பதைச் சமீபத்தில் வெளியாகியிருக்கும் People Research on India’s Consumer Economy ஆய்வு கண்டறிந்துள்ளது. இப்போதைய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் எதிர்பார்க்கும் விளைவுகளைத் தரும்பட்சத்தில், 2047இல் நடுத்தர வர்க்கம் 63%ஆகப் பெருகியிருக்கும் என அந்த ஆய்வு கணிக்கிறது.

அந்த ஆய்வு குறித்து எதிரும் புதிருமாகச் சமூக ஆய்வாளர்கள் விவாதித்துவருகிறார்கள். நடுத்தர வர்க்கத்தின் பெருக்கம் வருங்காலத்தில் இந்தியாவின் அரசியல், பண்பாட்டு வாழ்வில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். குடிமைச் சமூகத்தில் முற்போக்கான இயக்கங்கள் எழுந்துவரும் என்று ஊகிக்கிறார்கள். கடந்த காலத்தில் நடுத்தர வர்க்கம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத்தான் வரதட்சிணை, பாலியல் வன்முறை போன்றவற்றுக்கு எதிராகச் (போக்சோ உள்ளிட்ட) சட்டங்கள் இயற்றப்பட்டது உதாரணங்களாகச் சுட்டப்படுகிறது. அதெல்லாம் சரி; இப்படி நேர்மறையான திசையிலேயே யோசிப்பது மகிழ்ச்சிதரும்தான். ஆனால், எதிர்மறையான பங்களிப்பையும் நடுத்தர வர்க்கம் கணிசமாகச் செய்துவருகிறதே... அப்பக்கத்தையும் சேர்த்துத்தான் நாம் பார்க்க வேண்டும். அதற்கு முன்பாக நடுத்தர வர்க்கம் எது என்பது குறித்துச் சில வார்த்தைகள் பேசிக்கொள்ள வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x