Last Updated : 14 Nov, 2022 06:47 AM

 

Published : 14 Nov 2022 06:47 AM
Last Updated : 14 Nov 2022 06:47 AM

ப்ரீமியம்
மாநிலக் கல்விக் கொள்கை: தேவை முக்கோண இணைப்பு!

அனைவருக்கும் சம உரிமை, சம மதிப்பு, சம வாய்ப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் என்பது இந்திய அரசமைப்பு வலியுறுத்தும் அடிப்படைக் கோட்பாடு. இக்கோட்பாட்டுக்கு உட்பட்டுதான் கல்விக்கூடங்கள் செயல்படுகின்றனவா?

நாடு விடுதலைபெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகும் மாவட்டத்துக்கு ஒரு நவோதயா பள்ளி, மாதிரிப் பள்ளி, தகைசால் பள்ளி என்ற அளவில்தான் அரசாங்கப் பள்ளிகளின் நிலை உள்ளது. பணக்காரர்களின் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் படிப்பதில் தவறில்லை; பணம் கட்ட முடியாதவர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பட்டும். அரசமைப்பின் அடிப்படைக் கோட்பாடான சமத்துவத்துக்கு விரோதமான கல்வி அமைப்பைப் பாதுகாக்கும் வகையிலான கல்விக் கொள்கையே கடந்த நாற்பதாண்டுகளாகப் பின்பற்றப்பட்டுவருகிறது. இதன் விளைவு, கல்வியில் இன்று ஏற்பட்டிருக்கும் ஏற்றத்தாழ்வு. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் - தொழில்முறைப் பட்டப் படிப்புகளில் சேருவதற்கு 7.5% இடஒதுக்கீடு செயல்பாட்டில் இருக்கிறது; இது சமமான வாய்ப்புதானா? மீதி 92.5%இல் யார் பயனடைவார்கள் என யாரும் கணக்குப் போட்டுப் பார்க்கவில்லை. அறியாமை என்பது மிகக் கொடுமையானது. நாட்டில் அமைதியைப் பேணுவது என்பது அநீதிக்கு உள்ளாக்கப்படுவதை மக்கள் அறியாமலேயே வைத்திருப்பதுதான்; அநீதிக்கு எதிராகப் போராடாமல் இருக்கச் செய்வதுதான் சட்டம் - ஒழுங்குப் பராமரிப்பு. இவற்றைப் பற்றி அறிந்துகொள்ள வைக்காதது ஏட்டுக் கல்வி. இந்திய ஜனநாயகமும் கல்வியும் இன்றுவரை இப்படித்தான் செயல்படுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x