Published : 13 Nov 2022 07:31 AM
Last Updated : 13 Nov 2022 07:31 AM

ப்ரீமியம்
இராஜராஜரின் தளிச்சேரிக் கல்வெட்டு

இரா.கலைக்கோவன்

ஒரு கல்வெட்டு இவ்வளவு வரலாற்றுச் செய்திகளைத் தர முடியுமா என்று வியப்பூட்டும் அளவுக்கு விரிவாகவும் தெளிவாகவும் பேசும் கல்வெட்டுகளைத் தமிழ்நாட்டுக் கோயில்கள் பல கொண்டுள்ளன. பொதுக்காலம் 10ஆம் நூற்றாண்டில் ஒரு கோயிலின் வாழ்க்கை எப்படியிருந்தது என்றறிய விழைவாருக்கு முதல் இராஜராஜர் தஞ்சாவூரில் எடுப்பித்த இராஜராஜீசுவரத்துக் கல்வெட்டுகள் கைப்பிடித்து வழிகாட்டும்.

இராஜராஜீசுவரத்தில் இராஜராஜரும் இராஜேந்திரரும் பிறரும் வழங்கியிருக்கும் வரலாற்றுப் பதிவுகள் அனைத்துமே அந்நாளைய சமுதாயம் காட்டும் கண்ணாடிகள் என்றாலும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாகத் தளிச்சேரிக் கல்வெட்டுக்குள் கண் வைப்போம். தமிழ்நாட்டில் மட்டுமன்று, இந்தியத் திருநாட்டின் வேறெந்தத் திருக்கோயிலிலும் இதுவொத்த கல்வெட்டுகள் பதிவாகவில்லை என்பது இதன் பெருமை. இராஜராஜரின் 29ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டுக் கோயிலின் வடசுற்றுச் சுவரின் புறத்தே காணப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x