Published : 13 Nov 2022 07:43 AM
Last Updated : 13 Nov 2022 07:43 AM

ப்ரீமியம்
கி.ரா. நினைவாக தேவை கரிசல் ஆய்வு மையம்!

தான் வாழ்ந்த கோவில்பட்டி வட்டாரக் கரிசல் காட்டு வாழ்க்கையையும் அந்த மக்களின் மொழியில் பதிவுசெய்தார் எழுத்தாளார் கி.ராஜநாராயணன். அந்த வகையில் தமிழில் கரிசல் இலக்கியம் தனித்துவம் வாய்ந்தது. இலக்கியம் என்பதைத் தாண்டி மானுடவியல் துறையிலும் இந்தக் கரிசல் வாழ்க்கை குறித்த பதிவு முக்கியமானது; ஆய்வுக்குரியது. இன்றைய காலகட்டத்தில் கரிசல் வாழ்க்கை ஆராயப்பட வேண்டிய முக்கியத்துவம் மிக்கது.

2021-ம் ஆண்டு மே 17-ம் தேதி மறைந்த கி.ரா.வின் உடல் அவரது சொந்த ஊரான இடைசெவலில் உள்ள அவரது தோட்டத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. கி.ரா.வுக்கு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 45 சென்ட் இடத்தில் ரூ.150.75 லட்சம் மதிப்பில் தமிழக அரசு சார்பில் நினைவரங்கம், சிலை, நூலகம் ஆகியவை கட்டும் பணி நிறைவடையும் தறுவாயில் உள்ளது. இத்துடன் கி.ராவின் நினைவாக கரிசல் ஆய்வு மையத்தையும் அரசு தொடங்கினால் அது தமிழ் இலக்கியத்துக்கு மட்டுமல்ல தமிழ்ச் சமூகத்துக்குச் செய்யக்கூடிய மிகப் பெரிய சேவையாக இருக்கும் என எழுத்தாளர் உதயசங்கர் தெரிவிக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x