Published : 11 Nov 2022 06:49 AM
Last Updated : 11 Nov 2022 06:49 AM
நவம்பர் 12, 1947. மதியம் 3 மணிக்கு காந்தி டெல்லி வானொலி நிலையத்துக்குச் சென்றார். அது ஒரு தீபாவளி நாள். “இது ஒரு அதிசயமான ஆற்றல். இதில் நான் சக்தியைக் காண்கிறேன்...” என்று அப்போது வானொலியைப் பற்றி காந்தி வியந்துரைத்த சொற்கள் பின்னாளில் புகழ்பெற்றன. 1936இல் டெல்லியில் தொடங்கி, செயல்பட்டுவந்த வானொலி நிலையத்துக்குள் காந்தி, தன் வாழ்நாளில் அடியெடுத்து வைத்தது அந்த ஒரே ஒருமுறைதான்.
முதலும் கடைசியுமாக நிகழ்ந்த இதுவும் காந்தி விரும்பித் திட்டமிட்ட விஜயம் அல்ல. நாட்டுப் பிரிவினையின் விளைவாகப் பாகிஸ்தானிலிருந்து வெளியேறி டெல்லிக்கு அருகில் உள்ள குருச்சேத்திரம் முகாமில் தங்கியிருந்த அகதிகளைப் பார்த்து ஆறுதல் கூறிப் பேச விரும்பினார். திட்டப்படிச் செல்ல இயலாதுபோனதால் மாற்று ஏற்பாடாக வானொலி வழியாகப் பேச ஒப்புக்கொண்டார். பொதுச் சேவையின் நிமித்தம் காந்தியின் எதிர்பாராத நிலைய வருகை நிகழ்ந்த நவம்பர் 12ஐ அகில இந்திய வானொலி, ‘பொதுச் சேவை ஒலிபரப்பு நாள்’ (Public Service Broadcast Day) என்று பிரகடனப்படுத்தியது. பொதுச் சேவையை வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் 2000ஆம் ஆண்டில் காலப் பொருத்தம் வாய்ந்த அந்த அறிவிப்பு செய்யப்பட்டது. 2001 முதல் அந்த நாளில் ‘காந்தியத் தத்துவம், பொதுச் சேவை ஒலிபரப்பு’ சார்ந்த சிறந்த ஒலிபரப்புக்கு ஒரு விருதையும் அறிவித்து ஆண்டுதோறும் வழங்கிவருகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT