Last Updated : 09 Nov, 2022 06:47 AM

 

Published : 09 Nov 2022 06:47 AM
Last Updated : 09 Nov 2022 06:47 AM

ப்ரீமியம்
அஞ்சலி: விழி பா.இதயவேந்தன் | அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பாடியவர்!

எழுத்தாளர் விழி பா.இதயவேந்தன் (60) நவம்பர் 7 அன்று காலமானார். தமிழ் நவீன இலக்கியத்தில் 1990-களுக்குப் பிறகு ஏற்பட்ட மறுமலர்ச்சி எழுத்துகளில் ஒன்று அவருடையது. நடுத்தர வர்க்கத்தின் பிரதிபலிப்பாக இருந்துவந்த இந்திய / தமிழ் நவீன இலக்கியம் புதிய கருப்பொருளைக் கண்டடைந்த தொண்ணூறுகளின் காலகட்டத்தில் இதயவேந்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘நந்தனார் தெரு’ வெளியாகிக் கவனம்பெற்றது.

பேராசிரியர் பிரபா கல்விமணி (கல்யாணி) வழியாக மார்க்சிய, இலக்கிய அறிமுகம் பெற்ற இதயவேந்தன், கல்யாணியின் முன்னெடுப்பில் தொடங்கப்பட்ட மக்கள் கலை இலக்கிய அமைப்பான ‘நெம்புகோல்’ அமைப்பின் செயல்பாட்டாளராக இருந்தார். இலக்கியம், அரசியல் எனக் கருத்தாழமிக்க ‘நெம்புகோல்’ விவாதங்கள், இதயவேந்தன் என்ற ஆளுமையை உருவாக்கின. ‘நெம்புகோல்’ கையெழுத்துப் பத்திரிகையில் கவிதைகள் எழுதி இலக்கியத்துக்குள் நுழைந்தார். எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்தின் கதைகளை வாசித்த உத்வேகத்தில் கதைகளும் எழுதத் தொடங்கினார். இதயவேந்தனின் முதல் கதை ‘சங்கடம்’ ‘கணையாழி’யில் 1984இல் வெளிவந்தது. ‘மனஓசை’, ‘தோழமை’ ஆகிய இடதுசாரி இயக்க இதழ்களில் இணைந்து இயங்கிய அனுபவம் இவருக்கு உண்டு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x