Published : 08 Nov 2022 06:49 AM
Last Updated : 08 Nov 2022 06:49 AM

ப்ரீமியம்
குளிர்காலத்துக்கு முன்பே நடுங்கும் ஐரோப்பா!

கோ.ஒளிவண்ணன்

ரஷ்யா - உக்ரைன் போர் முற்றுப்பெறாத நிலையில், பக்கவிளைவாய் வேறொரு யுத்தம் மறைமுகமாக நடந்துகொண்டிருக்கிறது. அமெரிக்க- ஐரோப்பிய நாடுகளிடம் உக்ரைன் கொண்டுள்ள பற்றுதல் தனக்கு ஆபத்து என்று ரஷ்யா கருதுகிறது. அதை உறுதிசெய்வதுபோலவே உக்ரைனின் நடவடிக்கைகளும் அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் செயல்பாடுகளும் உள்ளன. உக்ரைன் மீது போர்தொடுத்து எளிதில் வென்றுவிடலாம் என்ற ரஷ்யாவின் திட்டம், உக்ரைனுக்கு அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் பெருமளவில் ஆயுத உதவிகள் செய்வதால் தவிடுபொடியாகிவிட்டது. இந்நிலையில் போரின் போக்கு வேறு திசைக்குச் செல்கிறது.

ஜெர்மனியின் மானியம்: ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடு ஜெர்மனி. இதன் இயற்கை எரிவாயுத் தேவையின் பெரும் பகுதி ஏறத்தாழ 52% ரஷ்யாவிலிருந்து பெறப்படுகிறது. தற்போது அதனை ரஷ்யா அதிரடியாக நிறுத்திவிட்டது. இதன் விளைவாகப் பெரும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டு, தொழிற்சாலைகளும் குடிமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களில் மின்கட்டணம் 10 மடங்காக உயர்ந்துவிட்டது. இதனால் சலுகை விலையில் மின்சாரம் அளிக்க ஜெர்மனி 200 பில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் கோடி) ஒதுக்கியுள்ளது. தன் நாட்டுமக்களும் உற்பத்தியாளர்களும் பாதிப்புக்குள்ளாகக் கூடாது என்ற ஜெர்மனியின் இத்திட்டம் சரியானதாக இருந்தாலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மற்ற 26 நாடுகளுக்குப் பெரும் தலைவலியாகவும் பேரிடியாகவும் அமையும் என்பது உறுதி. இந்த நிதி உதவியால், ஜெர்மன் தொழிற்சாலைகளில் பொருட்களின் உற்பத்திச் செலவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதேநேரத்தில், மற்ற 26 நாடுகளில் மானியம் வழங்க முடியாது என்பதால், அவர்களது உற்பத்தி விலை கூடுதலாக இருக்கும். ஜெர்மன் நாட்டுப் பொருட்கள் மலிவு விலையில் சந்தையில் குவியும். விளைவாக, பிற நாடுகளின் பொருளாதாரம் புதைகுழிக்குள் செல்லும் அபாயம் உள்ளது. மானிய அறிவிப்பு வெளியானதுமே மற்ற ஐரோப்பிய நாடுகள் பதற ஆரம்பித்துள்ளன. ஜெர்மனியைப் போல் பொருளாதாரத்தில் பலமான சில நாடுகள் மானியம் வழங்கித் தப்பித்துக் கொள்ளலாம். நிதி வளமற்ற நாடுகள் தங்கள் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க இறக்குமதி வரி விதிக்கலாம். ஆனால் அது எளிதல்ல. காரணம், ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பின் அடித்தளமே நாடுகளுக்குள் வணிகம் எளிதாக எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி நடைபெற வேண்டும் என்பதே. இதற்காகவே யூரோவைப் பொதுப் பணமாகப் பரிவர்த்தனைக்கு உருவாக்கிக் கொண்டனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x