Published : 08 Nov 2022 06:47 AM
Last Updated : 08 Nov 2022 06:47 AM

ப்ரீமியம்
அஞ்சலி க.நெடுஞ்செழியன்: தமிழ் மெய்யியல் ஆய்வு முன்னோடி!

தமிழக மெய்யியல் தொடர்பாகக் கவனம்கொள்ளத்தக்க ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர் க.நெடுஞ்செழியன் (79), நவம்பர் 4 அன்று காலமானார். தமிழியல் பொருள்முதல்வாதக் கோட்பாடு நவீன இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டபோது, மேற்குலகச் சிந்தனை என விமர்சிக்கப்பட்டது. கருத்துமுதல்வாதமே இந்தியச் சிந்தனை மரபு என முன்மொழியப்பட்டபோது, தத்துவவியலாளர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா போன்றோர் பொருள்முதல்வாதத்தின் இந்தியப் பின்னணியை எழுதினர். இந்த மரபில் பொருள்முதல்வாதம் தமிழகத்தில் தோன்றிய தத்துவம் என எடுத்துரைக்க முயன்றவர் நெடுஞ்செழியன்.

பெளத்த, சமண மதங்கள்போல் ஆசீவகமும் வடக்கிலிருந்து வந்த மதம் என்ற கருத்தை மறுத்து, அதன் தமிழ் வேர்களைத் தன் ஆய்வுகள்வழி நெடுஞ்செழியன் கண்டறிய முயன்றார்; இந்த ஆய்வு அவரது அடையாளமாகவும் கருதப்படுகிறது. இந்தியவியல் அறிஞரான ஏ.எல்.பசாமின் ஆசீவகம் குறித்த ஆய்வுகளை நெடுஞ்செழியன் இதற்கு ஆதாரமாக எடுத்துக்கொண்டார். தமிழ் இலக்கியங்கள் வழிதான் பசாம் ஆசீவகத்தை ஆராய்ந்தார். இந்த அடிப்படையில் நெடுஞ்செழியன் ஆசீவகம் ஒரு தமிழ் மதம் என்ற துணிபுக்கு வந்தார். அதற்கான சான்றுகளைக் கல்வெட்டு, இலக்கியங்கள் வழியாக அவர் தேடிச் சேகரித்துள்ளார். ஆசீவகத்தைத் தோற்றுவித்த மற்கலி கோசாலர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும் சாத்தன், ஐயனார் என இன்றும் வணங்கப்படும் திருவுரு அவர்தான் என்றும் நெடுஞ்செழியன் மொழிந்துள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x