Published : 07 Nov 2022 06:49 AM
Last Updated : 07 Nov 2022 06:49 AM

ப்ரீமியம்
ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே! - 04: தமிழர்களின் தொல் சமயம்

ஆ.சிவசுப்பிரமணியன்

‘பொன்னியின் செல்வன்’ நாவல் திரைப்படமாக வந்த பின் ராஜராஜனது சமயம் எது என்பது குறித்த விவாதம் தமிழ்ச் சமூகத்தில் தோன்றியுள்ளது. அவர் சைவரா இந்துவா என்பது விவாதப் பொருளாக மாறிவிட்டது. இடைக்காலத் தமிழகத்தை மையமாகக் கொண்டு தொடங்கிய இவ்விவாதம் பின்னோக்கிப் பயணித்துப் பல்லவர் காலத்தின் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், முதலாழ்வார்கள் என்போரைக் கடந்து, சங்க காலத்தில் காலூன்றிவிட்டது. இப்போது சைவம், இந்து என்ற கருப்பொருளுடன் தமிழர்தம் சமய வாழ்வு ஒற்றைத்தன்மை கொண்டதா... பன்முகத்தன்மை வாய்ந்ததா என்கிற ஆய்வுக்குள் நுழைந்தாயிற்று.

வைதீகச் சமயமரபு - அவைதீகச் சமயமரபு குறித்த சான்றுகள் சங்க இலக்கியத்தில் பரவலாகஇடம்பெற்றுள்ள நிலையில், அவரவர் கருத்துநிலைக்கேற்ப விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதே நேரத்தில் இவ்விரு சமயநெறிகளுக்கும் முற்பட்ட சமயநெறி ஒன்று தமிழரிடம் செல்வாக்குப் பெற்றிருந்தமை இரு தரப்பினராலும் கண்டுகொள்ளப்படவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x