Published : 06 Nov 2022 07:33 AM
Last Updated : 06 Nov 2022 07:33 AM

ப்ரீமியம்
பெண் கல்விக்கு வித்திட்ட முன்னோடி

நிவேதிதா லூயிஸ்

கிறிஸ்துவ மதபோதகர் தேவசகாயம் ஜானின் மகளாக மாயவரத்தில் 30 ஏப்ரல் 1832 அன்று அன்னம்மாள் ஆரோக்கியம் பிறந்தார். இங்கிலாந்து தேவாலயம் நியமித்த முதல் தென்னிந்தியப் போதகர் இவர். தஞ்சையிலும் அதைத் தொடர்ந்து நெல்லையிலும் போதகராகப் பணியாற்றிவந்த தேவசகாயம் ஜான், தன் மகள் அன்னம்மாள் மேல் மிகுந்த அன்புகொண்டிருந்தார். ஊழியத்துக்குச் செல்லும்போதும் வாசிக்கும்போதும் பயணிக்கும்போதும் அவரது வழித்துணையாக மகளை அருகே வைத்துக்கொண்டார்.

14 வயது முதலே கிறிஸ்துவ மறை பரப்புப் பணியில் அன்னம்மாள் ஈடுபடத் தொடங்கினார். பெண்கள் பள்ளி ஒன்றில் படித்துவந்த பெண்களின் உடல், உள்ளத் தேவைகளைக் கவனித்து உதவிவந்தார். குழந்தைகள் மேல் அன்னம்மாளுக்குப் பெரும் ஈடுபாடு இருந்ததால் அவரால் குழந்தைகளுடன் ஒன்ற முடிந்தது. ஆதரவற்ற குழந்தைகள், பெற்றோரை இழந்த குழந்தைகள், ஏழைக் குழந்தைகள்மேல் தனி வாஞ்சை கொண்டிருந்தார் அன்னம்மாள். நெல்லை மிஷனின் கீழ் இயங்கிவந்த கடாட்சபுரம் சேகரத்தின் ‘சின்னம்மாள்’ என்றே அன்னம்மாள் அறியப்பட்டார். 1837ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிளாக்பர்ன் என்ற மிஷனரியின் மனைவி கடாட்சபுரத்தில் ‘நார்மல் பள்ளி’ ஒன்றைத் திறந்து பெண்களுக்குக் கல்வி கற்றுத்தந்தார். 1841ம் ஆண்டு அவர் இங்கிலாந்து திரும்பிய பின் இந்த நார்மல் பள்ளியை நிர்வகிக்கும் பொறுப்பு அந்த சேகரத்தின் போதகரான தேவசகாயம் ஜானுக்குக் கிடைத்தது. இந்தப் பள்ளியில்தான் அன்னம்மாள் பயின்றார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x