Published : 03 Nov 2022 06:49 AM
Last Updated : 03 Nov 2022 06:49 AM

ப்ரீமியம்
புத்துயிர் பெறுமா பிரேசில்?

தென் அமெரிக்கக் கண்டத்தின் மிகப் பெரிய நாடான பிரேசிலின் 39 ஆவது அதிபராகத் தேர்வாகியிருக்கிறார் (50.10% வாக்குகள்) தொழிலாளர்கள் கட்சியின் தலைவரான லூயிஸ் இனாசியோ ‘லூலா’ டி சில்வா (சுருக்கமாக லூலா). அதிதீவிர வலதுசாரியான தற்போதைய அதிபர் ஜெயீர் போல்சனாரோவை (49.10% வாக்குகள்) வென்று, மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்குத் திரும்பும் இடதுசாரியான லூலாவின் இந்த வெற்றி, லத்தீன் அமெரிக்காவின் சமகால அரசியலில் அசாத்தியமான மீள்வருகையாகப் பார்க்கப்படுகிறது.

சா பாலோவின் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த எளிய பின்புலத்திலிருந்து வந்த லூலா, ஒரு தொழிற்சங்கவாதியாக வாழ்க்கையைத் தொடங்கினார். பிரேசிலில் ராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது, 1978 முதல் 1980 வரையிலான காலகட்டத்தில் மிகப் பெரிய வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்நின்றுநடத்திய லூலா, 1980இல் இடதுசாரிப் பின்புலம் கொண்ட தொழிலாளர்கள் கட்சிதொடங்கப்படுவதிலும் முக்கியப் பங்குவகித்தார். பிரேசிலில் மக்களாட்சியை வலியுறுத்திய முக்கியத் தலைவர்களில் ஒருவராகத் தீவிரமாகச் செயல்பட்டுவந்த லூலா, 1986 தேர்தலில் நாட்டிலேயே மிக அதிக வாக்குகளுடன் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்வானார்.பிறகு, 1989இல் அதிபர் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்; தொடர்ந்து 1994, 1998 அதிபர் தேர்தல்களிலும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தாலும் அவருக்கான ஆதரவு வலுப்பெற்றுவந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x