Published : 02 Nov 2022 06:49 AM
Last Updated : 02 Nov 2022 06:49 AM

ப்ரீமியம்
சொல்… பொருள்… தெளிவு | ஆளுநரும் அவருடைய ‘விருப்ப’மும்!

தொகுப்பு: கோபால்

ஆளுநர் பதவியை அவமதிக்கும் வகையில் கேரள நிதியமைச்சர்கே.என்.பாலகோபால் பேசியதற்காக அவர் அமைச்சராகத் தொடர்வதற்கான ‘ஆளுநரின் விருப்ப’த்தைத் தான்நீக்கிக்கொண்டதாக கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அண்மையில் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது ஆளுநரின் அதிகாரம் குறித்த விவாதங்களைத் தொடங்கிவைத்துள்ளது. ஆளுநர் என்பவர் யார், அவருடைய அதிகாரங்கள் என்ன, அவருக்கு விருப்பமில்லை என்றால் ஒரு மாநில அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாதா என்பன போன்ற கேள்விகள் பேசுபொருள் ஆகியுள்ளன.

ஆளுநர் பதவியின் வரலாறு: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1858இல் மாகாணங்களுக்கான ஆளுநர்கள் பதவி அறிமுகப்படுத்தப்பட்டன. அவர்கள் பிரிட்டிஷ் முடியரசின் பிரதிநிதிகளாகச் செயல்பட்டனர். 1935 இந்திய அரசுச் சட்டத்தின்படி பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் மாகாணங்களுக்குப் பலவகையான சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட்டன. ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண அமைச்சர்கள்/சட்டசபையின் ஆலோசனையின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பது அவற்றில் ஒன்று. அதேநேரம், ஆளுநருக்குச் சில சிறப்புப் பொறுப்புகளும் விருப்புரிமை அதிகாரங்களும் (Discretionary Powers) வழங்கப்பட்டிருந்தன; சுதந்திரத்துக்குப் பிறகும் ஆளுநர் பதவி தக்கவைக்கப்பட்டது. அரசமைப்புச் சட்ட அவையில் ஆளுநர் பதவி குறித்தும் அவருடைய அதிகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. இந்த விவாதங்களில் மாநிலங்களுக்கான ஆளுநர் மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின் அடிப்படையில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஆளுநரின் கடமைகள், அதிகாரங்கள் உள்ளிட்டவையும் தீர்மானிக்கப்பட்டன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x