Published : 01 Nov 2022 06:50 AM
Last Updated : 01 Nov 2022 06:50 AM

ப்ரீமியம்
உள்ளாட்சிகள் வரலாற்றில் புதிய ஒளிக்கீற்றுகள்!

ஜெயபால் இரத்தினம்

தமிழக உள்ளாட்சிகளின் வரலாற்றில் முத்திரை பதிக்கும் வகையில் சிறப்பான இரண்டு புதிய அத்தியாயங்கள் இன்று (2022 நவம்பர் 1) தொடங்குகின்றன. ‘உள்ளாட்சி தினம்’ கொண்டாட்டம், நகர்ப்புற உள்ளாட்சிகளில் ‘வார்டு குழு’, ‘பகுதிக் குழு’ செயலாக்கம் ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகள் இன்று அரங்கேறுகின்றன. தமிழக மக்கள் இதற்காகப் பெருமைப்பட வேண்டும்.

தமிழ் மண்ணின் பாரம்பரியப் பண்பாட்டுப் பெருமைகளில் உள்ளாட்சிகளும் ஒன்று. வரலாற்றை உற்றுநோக்கினால், அந்தந்தக் காலச் சூழல்களுக்கேற்ப நாட்டை ஆள்வதற்கான ஆட்சியியல் தத்துவங்கள் மாறியிருப்பதும், அதற்கேற்றவாறு ஆளும் அரசுகள் மாறியிருப்பதும் தெரியவரும். ஆனால், உள்ளூர் நிர்வாகத்தினை அந்தந்த ஊரில் வாழும் உள்ளூர் மக்களின் பிரதிநிதிகளே மேற்கொள்ளுதல் என்ற தத்துவம் சங்க காலம் தொடங்கி இன்றுவரை மாறவே இல்லை. மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள இந்த நிர்வாகமே நாட்டு நிர்வாகத்துக்கான அடிப்படை; மக்களாட்சியின் ஆணிவேராகத் திகழ்பவை உள்ளாட்சி அமைப்புகளே.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x