Last Updated : 28 Oct, 2022 06:47 AM

 

Published : 28 Oct 2022 06:47 AM
Last Updated : 28 Oct 2022 06:47 AM

ப்ரீமியம்
வி.எஸ்.அச்சுதானந்தன் 100 | கேரளத்தின் பொதுவுடமைத் தந்தை!

இந்தியாவின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரான வி.எஸ்.அச்சுதானந்தன், 100ஆவது வயதில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வேர்விடத் தொடங்கி, இன்று விருட்சமாகக் கிளை பரப்பி நிற்கும் கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றுடன் ஒப்பிடத்தக்கது வி.எஸ்ஸின் வாழ்க்கை. அவர் பிறந்த இரண்டாம் வருடத்தில்தான் எம்.என்.ராய் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கான விதையைத் தூவினார். பிறகு ‘கம்யூனிஸ்ட் சோஷலிஸ்ட் பார்ட்டி’ உதயமாகி, அது ‘கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா’வான 1940இல் வி.எஸ். அதில் அங்கமானார்.

ஆலப்புழை அருகே புன்னப்பராவில் பிறந்தவர் வி.எஸ். தொழிலாளர் சங்க நடவடிக்கைகளில் முன்னின்றுசெயல்பட்டவர். கேரள கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடித்தளமிட்ட தலைவர்களில் ஒருவரான பி.கிருஷ்ணப்பிள்ளையின் உத்வேகத்தால் கட்சிக்குள் நுழைந்தவர். ஆலப்புழையில் கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பை ஏற்றவர். கேரளத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் வேர்பிடிக்கக் காரணமாக இருந்தது ‘புன்னப்பரா வயலார்எழுச்சி’ப் போராட்டம். புன்னப்பரா, வயலார் தொழிலாளர்கள் இணைந்து திருவிதாங்கூர் சமஸ்தானம் அறிமுகப்படுத்தவிருந்த அமெரிக்க மாதிரி ஆட்சி முறைக்கு எதிராக 1946இல் நிகழ்த்திய போராட்டம் இது. கையில்கிடைத்ததை ஆயுதமாக ஏந்தி திருவிதாங்கூர் போலீஸ்படையை எதிர்கொண்ட தோழர்களில் வி.எஸ்.ஸும் ஒருவர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்பட்ட இந்தப் போராட்டத்தில் வி.எஸ். கைதுசெய்யப்பட்டு, பூஜைப்புரை சிறையில் அடைக்கப்பட்டார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் கம்யூனிஸ்ட் எனச் சொல்லிக்கொள்வதற்கு அசாத்தியமான தைரியம் வேண்டும். அந்த நெஞ்சுரத்துடன் கட்சிப் பணியாற்றினார் வி.எஸ்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x